Kaalamo Selluthe காலமோ செல்லுதே
Kaalamo Selluthe
1. காலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்
2. துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கி போம்
நாயகன் நம் இயேசுவால் --- மகிமையில்
3. கருணையின் அழைப்பினால்
மரணநேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட --- மகிமையில்
4. உலகத்தின் மாந்தரே
கலங்காதீர் வாருமே
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம் --- மகிமையில்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.