Saturday 21 January 2023

Masilla Kanniye Mathave மாசில்லா கன்னியே மாதாவே


 

மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

1. மூதாதை தாயாசை முற்பாதமற்றாய்

ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்

ஆவே ஆவே  ஆவே மரியா

ஆவே ஆவே  ஆவே மரியா

 

2. அருள் நிறைந்த மாதாவே  ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே நீ பேறுபெற்றாயே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே


Friday 20 January 2023

Suga Ragam Neeye Yesuve சுக ராகம் நீயே இயேசுவே


 

சுக ராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன்

தெவிட்டாத நீா்ச்சுனையாகவே கவி நூறு பாடுவேன்

மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ

தினந்தோறும் வாழ்த்துவேன்.

 

1. உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்

உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்

அன்பில் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்

அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்

நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல்

நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை.

 

2. கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்

அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன்

உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்

புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்

நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம்

உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே.


Wednesday 18 January 2023

Vaarum Naam Ellorum Koodi வாரும் நாம் எல்லோரும் கூடி


 

வாரும் நாம் எல்லோரும் கூடி

மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்

மாசிலா நம் இயேசு நாதரை

வாழ்த்திப் பாடுவோம் 


1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்

தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – மகிழ்


2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே

மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – மகிழ்


3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – மகிழ்


4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த

மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – மகிழ்


5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்

பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – மகிழ்


Sagotharargal Orumithu சகோதரர்கள் ஒருமித்து


 

1. சகோதரர்க ளொருமித்துச்

சஞ்சரிப்பதோ எத்தனை

மகா நலமும் இன்பமும்

வாய்த்த செயலாயிருக்குமே

 

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்

அபிஷேகத்தின் தைலந்தான்

ஊறித் தாடியில் அங்கியில்

ஒழுகுமானந்தம் போலவே

 

3. எர்மோன் மலையின் பேரிலும்

இசைந்த சீயோன் மலையிலும்

சேர்மானமாய்ப் பெய்கின்ற

திவலைப் பனியைப் போலவே

 

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்

சேனை எகோவா தருகிற

ஆசீர்வாதம் ஜீவனும்

அங்கே என்றுமுள்ளதே


Monday 16 January 2023

Aiyaiyaa Naan Vanthen ஐயையா நான் வந்தேன்


 

ஐயையா நான் வந்தேன் தேவ

ஆட்டுக்குட்டி வந்தேன்

 

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்

துஷ்டன் எனை அழைத்தீர் தயை

செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்

ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்

தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

3. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்

எத்தனை எத்தனையோ இவை

திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்

தென்னை அரவணையும் மனம்

தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தத்தங்களால்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்

மாறி அகன்றதுவே இனி

திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்.


Paalar Gnayirithu Paasamai Vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்


 

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்

ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பை எண்ணிப்பாலர்

 

1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,

பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,

பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,

ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்பாலர்

 

2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,

பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,

கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு

நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்

 

3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,

இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே,

அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்

எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டுபாலர்

Friday 13 January 2023

Imayamum in Kumariyum இமயமும் குமரியும்


 

1. இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே

2. உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே