Monday, 31 October 2022

En Yesuve Unnai Naan என் இயேசுவே உன்னை நான்


 

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

 

1. உன் நாமம்  என் வாயில்

நல் தேனாய் இனிக்கின்றது 

உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்

செய்தியாய் ஜொலிக்கின்றது

உன் அன்பை நாளும் எண்ணும் போது

ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே

 

2. உன் நெஞ்சின் கனவுகளை

நிறைவேற்ற நான் உழைப்பேன்

உறவாகும் பாலங்களை

உலகெங்கும் நான் அமைப்பேன்

இறையாட்சி மலரும் காலம் வரையில்

இனிதாய் எனை அளிப்பேன்  –என் இயேசுவே

Vanthalume Ennalume வந்தாளுமே எந்நாளுமே


 


1. வந்தாளுமே எந்நாளுமே

உன் நாமமே என் தாபமே

இந்நேரமே கண்பாருமே

 

2. தேவாவியே வரந்தாரும்

இப்பாவியின் பாவம் தீரும்

உம் ஜோதியின் ஒளிவீசும்

 

3. சத்துருக்கள் சதி செய்ய

நித்தம் என்னை நெருக்குகிறார்

அத்தனே நீர் அடைக்கலம்

 

4. இப்பாரிலே நின்பேரையே

தப்பாமலே யான் பாடியே

எப்போதுமே கொண்டாடுவேன்

 

5. என் மேசையா உன் ஆசையைக்

கொண்டோசையாய் நான் பேசவே

நின்னாசி தா நல் நேசமாய்

 

6. நாதனுன்னை எந்நேரமும்

ஓதும் ஏழைப் பாவியேனை

ஆதரித்தே ஆண்டருள்வாய்


Friday, 2 September 2022

Jeevanulla Arathanai ஜீவனுள்ள ஆராதனை


 


ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை

1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே

4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே

5. எப்பொழுதும் ஆராதனை உமக்கு தானே
இப்பொழுதும் ஆராதனை உமக்கு செய்வேன்


Thursday, 1 September 2022

Arathanaikuriavare Ummai ஆராதனைக்குரியவரே உம்மை


 


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் 
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே 

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்


Tuesday, 23 August 2022

Boomiyin Manthare Koodi vaareer பூமியின் மாந்தரே கூடி வாரீர்


 


1. பூமியின் மாந்தரே கூடிவாரீர்
பூரித்தே பேரன்பாய்ப் பாடி வாரீர்
தேனிசைப் பாமலர் சூடிடுவீர்
தேவனின் திருமுன்னே நாடிடுவீர்

2. நம்மையிங் காக்கியோர் ஓரிறையாம்
நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம்
மெய்மையின் மேய்ச்சலின் செம்மறி நாம்
மேவிநம் ஆயனை நாமறிவோம்

3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே
நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே
நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே

4. ஆண்டவன் நன்மையின் மயமாவார்
ஆரருள் மாறாத நயமாவார்
ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய்
ஆண்டென்றும் தாங்கிடும் அருள் நிறைவாய்


Saturday, 6 August 2022

Vanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலை


 

Vanamum boomiyum malai pallathakum

Vaalthume aandavar  nallavar vallavar

 

1. Santhira sooryan sagalamum vananguthe

Enthanin ithayamum inbathal ponguthe 

unthanin kirubaiyai ennavum mudiyathe

thanthaiyumanavar nallavar vallavar- vanamum

 

2. Pachai pasumaigalum paramanai potruthe

paravai inangalum padi thuthikuthe 

Paktharin  ullam  paravasam adaiyuthe

Parisutha aandavar nallavar vallavar- vanamum

 

3. Udal nalam petrathal ullamum ponguthe

Kadal pola karunyam kandathal thulluthe 

kadalalai yesuvin patham thaluvuthe

Thidamana aandavar nallavar vallavar- vanamum


Saturday, 30 July 2022

Unnai Sirushtithavar Unnai Marapaaro உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ


 


உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ

உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ – 2

 

கலங்கிடும் மாந்தரே

கண்ணீ ரை துடைத்திடு – 2

கவலையை விட்டு விட்டு வா

இயேசுவைப் பின்பற்றி வா – 2

 

1. காற்றும் கடலும் எதற்காக

கனிமரமெல்லாம் எதற்காக – 2

சூரிய சந்திரனும் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

2. மலையும் மலர்களும் எதற்காக

நிலமும் நீரும் எதற்காக – 2

பாடும் பறவைகள் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

3. சிலுவை சுமந்தது எதற்காக

சிந்தின இரத்தம் எதற்காக – 2

ஜீவனை கொடுத்தது எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2