Friday, 28 May 2021

Inba Geetham Thunba Neram இன்ப கீதம் துன்ப நேரம்


Inba Geetham Thunba Neram
இன்ப கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே என் இயேசுவே
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

1. பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீரூற்றும் நீரே – இன்ப

2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப

3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராது என்னைக் காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
எந்தை என் தந்தையும் நீரே – இன்ப

4. போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்று முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப

5. உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அணைத்து
எத்தனையோ நன்மை செய்தீர் – இன்ப

6. கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன் – இன்ப

7. அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப

Friday, 21 May 2021

En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின்


  En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1. லீலி பு ஷ் பம் சரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2. கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3. நேசக்கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தரின் ஆறுதலே 4. தென்றலே வா வாடையே எழும்பு தூதாயீம் நற்கனி தூயருக்கே வேலி அடைத்த தோட்டமிதே வந்திங்கு உலாவுகின்றார் 5. நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும் கன்மலை சிகரம் என் மறைவே இந்நேரமே அழைத்தார் 6. நித்திரையே செய்திடும் ராவில் நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே என் கதவருகே நின்றழைத்த இயேசுவை நேசிக்கிறேன் 7. நேசத் தழல் இயேசுவின் அன்பே நேசம் மரணம் போல் வலிதே வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால் உள்ளம் அணைந்திடாதே 8. தூய ஸ்தம்பம் போலவே எழும்பி தேவ குமாரன் வந்திடுவார் அம்மினதாபின் இரதம் போல அன்று பறந்து செல்வேன்

Wednesday, 19 May 2021

Akkini Abishegam அக்கினி அபிஷேகம்


 Akkini Abishegam அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே எம்மில் - அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே இன்று - அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை - அக்கினி 4. நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவியே வந்தாளும் நல்ல - அக்கினி 5. மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரம் தாரும் தேவ - அக்கினி 6. இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் பின் - அக்கினி

Sunday, 16 May 2021

Arulnathar Naamamathil அருள்நாதர் நாமமதில்


Arulnathar Naamamathil
அருள்நாதர் நாமமதில் 
ஒருமனமாய் உருகி  
தொழுகின்ற நேரமெல்லாம்  
எழும்பிடுவார் நடுவில் -- நாம்

1. இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்   
தவறாமல் அணைத்திடுவார்

2. நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே 
பரிகாரி நானே என்பார்  
பட்சமாய் தாங்கிடுவார்
 
3. மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார்
தூய்மையாய் மாற்றிடுவார்

En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே


 En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும் (2) 1. பஞ்சம் பசியோ நிர்வாணமோ மிஞ்சும் வறுமையோ வந்திடினும் கொஞ்சமும் அஞ்சாதே தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார் - என் 2. உற்றார் உறவினர் மற்றும் பலர் குற்றமே கூறித் திரிந்திடினும் கொற்றவன் இயேசுன்னை பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என் 3. நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில் அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும் வஞ்சகன் எய்திடும் நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என் 4. வாழ்க்கைப் படகினில் அலை மோதி ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார் சூழ்ந்திடும் புயல் நீக்கி வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என் 5. மரணமே வந்தாலும் மருளாதே சரணடைந்தால் தைரியம் தந்திடுவார் அரணவர் ஆபத்தில் திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என் 6. துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய் அன்பர் சென்ற பாதை அதுவேதான் துன்பமே உன் பங்கு துன்ப மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்

Saturday, 15 May 2021

Nithyanantha Karthar Yesuve நித்தியானந்த கர்த்தர் இயேசுவே


 Nithyanantha Karthar Yesuve 1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே சீயோனிலே சுவிசேஷகர் ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் 2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் - சீயோனிலே 3. உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள் பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் - சீயோனிலே 4. நரக வழி செல்லும் மாந்தருக்காய் நடு இராப்பகல் அழுதே நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய் நனைந்து வருந்தி ஜெபிப்போம் - சீயோனிலே 5. அவமானங்கள் பரிகாசங்கள் அடைந்தாலும் நாம் உழைப்போம் ஆத்தும பாரமும் பிரயாசமும் அல்லும் பகலும் நாடுவோம் - சீயோனிலே 6. எதிரிகள் எதிரே பந்தி எமக் காயத்தப் படுத்தி எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார் எரிகோ மதிலும் வீழ்ந்திடும் - சீயோனிலே 7. சீயோன் என்னும் சுவிசேஷகி சிகரத்தில் ஏறுகின்றாள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இலக்கம் நோக்கியே ஓடுவோம் - சீயோனிலே

Friday, 14 May 2021

Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே


 Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே எந்தன் இயேசு என் துணையே என் துன்ப நேரத்திலே இயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம் கர்த்தரே என்னை சுமந்தார் கண்ணீர் யாவையும் துடைத்தார் 1. உண்மையாய் என்னையும் நேசித்தார் உள்ளங்கையில் என்னை வரைந்தார் அவர் அறியாதொன்றும் வந்ததில்லை அவரையே சார்ந்து கொண்டேன் 2. கர்த்தரோடிசைந்தே நடந்தேன் கிருபை சமாதானம் ஈந்தார் விசுவாசத்தால் நானும் பிழைத்ததால் விரும்பி என்னை அணைத்தார் 3. யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும் யோர்தான் நதி புரண்டு வந்தும் எலியாவின் தேவன் என் ஜெபங்களை ஏற்று பதில் அளித்தார் 4. இத்தனை அற்புத நன்மைகள் கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் இதுவரை வழிகாட்டி நடத்தினார் இன்னமும் காத்திடுவார் 5. உலகம் முடியும் வரையும் உந்தனோடிருப்பேன் என்றவர் மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில் மேன்மை பாரட்டுகிறேன்