Arulnathar Naamamathil
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில் -- நாம்
1. இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்
தவறாமல் அணைத்திடுவார்
2. நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார்
பட்சமாய் தாங்கிடுவார்
3. மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார்
தூய்மையாய் மாற்றிடுவார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.