Sunday 9 May 2021

Ulagum Vaanum உலகும் வானும்


 Ulagum Vaanum 1. உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய் இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் 2. அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த் தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் 3. பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் 4. பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன் 5. இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ இறந்தோரிட நின்றே உயிரொ டெளுந்தாரெனவும் நம்புகிறேன் 6. சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன் 7. உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.