பாலர்
ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி
இயேசு நாமம் பணிந்து போற்றும்.
தாலந்தை
புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி
வந்த சுவாமி இயேசு அன்பை எண்ணிப் — பாலர்
1. பாலர்
சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
பாலர்
நேசர் பதம் பணியக் கற்றோம்,
பாரில்
ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
ஊரில்
எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் — பாலர்
2. தேடி
வந்தலையும் தேசிகருண்டு,
பாடி
ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி
வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி
மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்
3. இன்று
மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
இன்னும்
நித்தியமும் பாதுகாப்பாரே,
அன்பின்
சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி
முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு — பாலர்