1. பூமியின் மாந்தரே கூடிவாரீர்
பூரித்தே பேரன்பாய்ப் பாடி வாரீர்
தேனிசைப் பாமலர் சூடிடுவீர்
தேவனின் திருமுன்னே நாடிடுவீர்
2. நம்மையிங் காக்கியோர் ஓரிறையாம்
நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம்
மெய்மையின் மேய்ச்சலின் செம்மறி நாம்
மேவிநம் ஆயனை நாமறிவோம்
3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே
நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே
நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே
4. ஆண்டவன் நன்மையின் மயமாவார்
ஆரருள் மாறாத நயமாவார்
ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய்
ஆண்டென்றும் தாங்கிடும் அருள் நிறைவாய்