Tuesday 23 August 2022

Boomiyin Manthare Koodi vaareer பூமியின் மாந்தரே கூடி வாரீர்


 


1. பூமியின் மாந்தரே கூடிவாரீர்
பூரித்தே பேரன்பாய்ப் பாடி வாரீர்
தேனிசைப் பாமலர் சூடிடுவீர்
தேவனின் திருமுன்னே நாடிடுவீர்

2. நம்மையிங் காக்கியோர் ஓரிறையாம்
நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம்
மெய்மையின் மேய்ச்சலின் செம்மறி நாம்
மேவிநம் ஆயனை நாமறிவோம்

3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே
நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே
நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே

4. ஆண்டவன் நன்மையின் மயமாவார்
ஆரருள் மாறாத நயமாவார்
ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய்
ஆண்டென்றும் தாங்கிடும் அருள் நிறைவாய்


Saturday 6 August 2022

Vanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலை


 

Vanamum boomiyum malai pallathakum

Vaalthume aandavar  nallavar vallavar

 

1. Santhira sooryan sagalamum vananguthe

Enthanin ithayamum inbathal ponguthe 

unthanin kirubaiyai ennavum mudiyathe

thanthaiyumanavar nallavar vallavar- vanamum

 

2. Pachai pasumaigalum paramanai potruthe

paravai inangalum padi thuthikuthe 

Paktharin  ullam  paravasam adaiyuthe

Parisutha aandavar nallavar vallavar- vanamum

 

3. Udal nalam petrathal ullamum ponguthe

Kadal pola karunyam kandathal thulluthe 

kadalalai yesuvin patham thaluvuthe

Thidamana aandavar nallavar vallavar- vanamum


Saturday 30 July 2022

Unnai Sirushtithavar Unnai Marapaaro உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ


 


உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ

உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ – 2

 

கலங்கிடும் மாந்தரே

கண்ணீ ரை துடைத்திடு – 2

கவலையை விட்டு விட்டு வா

இயேசுவைப் பின்பற்றி வா – 2

 

1. காற்றும் கடலும் எதற்காக

கனிமரமெல்லாம் எதற்காக – 2

சூரிய சந்திரனும் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

2. மலையும் மலர்களும் எதற்காக

நிலமும் நீரும் எதற்காக – 2

பாடும் பறவைகள் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

3. சிலுவை சுமந்தது எதற்காக

சிந்தின இரத்தம் எதற்காக – 2

ஜீவனை கொடுத்தது எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2


Thursday 28 July 2022

Padal Padi Magilvene பாடல் பாடி மகிழ்வேனே


 

பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரேபரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்

அல்லேலூயா பாடுவேன் நான்

1. மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

2. கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

3. நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்


Wednesday 27 July 2022

Nam Yesu Nallavar நம் இயேசு நல்லவர்


 


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார்உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் -இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை -நாம்

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய்
குறையெல்லாம் நீக்குவார் -உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்


Tuesday 26 July 2022

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி




 

ஆத்துமாவே ஸ்தோத்திரி
முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா

1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்

2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்

3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்

Thuthi Eduthal துதி எடுத்தால்


 


துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

1. டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்

3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் நிச்சயம்

4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே

5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவார்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை