Thursday, 28 July 2022

Padal Padi Magilvene பாடல் பாடி மகிழ்வேனே


 

பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரேபரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்

அல்லேலூயா பாடுவேன் நான்

1. மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

2. கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

3. நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்


Wednesday, 27 July 2022

Nam Yesu Nallavar நம் இயேசு நல்லவர்


 


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார்உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் -இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை -நாம்

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய்
குறையெல்லாம் நீக்குவார் -உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்


Tuesday, 26 July 2022

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி




 

ஆத்துமாவே ஸ்தோத்திரி
முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா

1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்

2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்

3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்

Thuthi Eduthal துதி எடுத்தால்


 


துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

1. டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்

3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் நிச்சயம்

4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே

5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவார்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை


Thursday, 14 July 2022

Ithayame Nee Paadu இதயமே நீ பாடு


 

இதயமே நீ பாடு
சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே
நம் தேவன் செய்த நன்மைக்காக

1. எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை
கண்ணின் மணிபோல் காத்தாரே
தூங்காமல் உறங்காமல் எந்நேரமும்
அருகில் இருந்து காத்தாரே
காக்கும் தெய்வம் இயேசு
காண்கின்ற தேவன் இயேசு

2. தாங்க முடியா பெலவீனத்தில்
வேதனை படுக்கை வியாதியினில்
நோய்களையெல்லாம் சுமந்தாரே
அற்புத விடுதலை தந்தாரே
தாங்கும் தெய்வம் இயேசு
சுகம் கொடுத்த தேவன் இயேசு

3. ஆயிரம் ஆயிரம் ஆலோசனை
நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே
ஒவ்வொரு நாளும் நான் நடக்கும்
பாதையும் அவரே காட்டினாரே
நல்ல மேய்ப்பர் இயேசு
வழி நடத்தும் தேவன் இயேசு

4. ஜீவன் சுகம் பெலன் எனக்குத் தந்து
அனுதினமும் புது கிருபை தந்து
என் ஆயுள் நாட்களை அன்றாடமும்
கூட்டி கொடுத்து காத்தாரே
அவரைப் புகழ்ந்து பாடு
செய்த செயலை நினைத்துப் பாரு


Thursday, 7 July 2022

En Meetpar Chiristhu Uyirthaar என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்



என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்

எனக்கென்ன ஆனந்தம்

என் மீட்பர் சாவை ஜெயித்தார்

எனக்கென்ன பேரின்பம்

 

1. பூலோகமெங்கும் ஓர் செய்தி

மேலோகமெங்கும் விண் ஜோதி

நரர் வாழ்த்திடவே பெரும் நீதி

நீர் மாறா மெய் ஜோதி

 

2. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்

உயிர்த்தெழுந்ததின் மேன்மையைக் கண்டேன்

நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்

பரலோக வாழ்வென்பேன்

 

3. அல்லேலூயா துதி பாடு

இன்று அமலன் எழுந்தார் பாடு

மோட்ச வாசலை திறந்தார் பாடு

எந்நாளும் புகழ் பாடு


Tuesday, 5 July 2022

Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா

 



1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லைப் பரனே