Friday, 1 July 2022

Mahibaniye Anuthiname மகிபனையே அனுதினமே


 


மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன்தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால்மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரேமகிபனையே

3. அழைத்தாரே சுவிசேஷத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம்மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவேமகிபனையே


Belan Ontrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா


 

பெலன் ஒன்றும் இல்லை தேவா

ஆவியால் பெலப்படுத்தும்

சத்துவம் இல்லாத எனக்கு

சத்துவம் தந்தருளும் 

 

1. மானின் கால்களைப் போல

என் கால்களை பெலப்படுத்தும்

நூனின் குமாரனைப் போல 

என்னையும் பெலப்படுத்தும் 

 

2. சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்

சோதனை வெல்ல உதவும்

மாய உலகத்தை ஜெயிக்க

என்னையும் பெலப்படுத்தும் 

 

3. சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்

வழுவாமல் காத்து நடத்தும்

கழுகு போல் செட்டைகள் அடித்து 

உயரே எழும்ப செய்யும்  

Wednesday, 29 June 2022

Yesuvin Anbil Moolgavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்


 

1. இயேசுவின் அன்பில் மூழ்கவும்

  நேசத்தின் ஆழம் பார்க்கவும்

  இன்னமும் தீரா வாஞ்சையே

  என்னில் உண்டாகுகின்றதே.

 

  ஆட்கொண்டவர் நேசம்

  ஈடேற்றின  நேசம்

  இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்

  உன்னத அன்பைப் போற்றுவேன்.

 

2. இயேசுவின் சொல்லும் சித்தமும்

  ஆசையுள்ளோனாய்ச்  செய்யவும்

  தேவ ஒத்தாசை நம்புவேன்

  ஆவியின் பேரில் சாருவேன்

 

3. நாதரின் இன்ப சத்தமும்

  வேதத்தில் கேட்டு நித்தமும்

  ஆத்தும நன்மை நாடுவேன்

  நீதியின் பாதை செல்லுவேன்.

 

4. இயேசுவின் இராஜரீகமும்

  ஆசித்த மா செங்கோன்மையும்

  விண்ணிலே தோன்றும் வண்ணமாய்

  மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.


Tuesday, 28 June 2022

Ella Namathirkum எல்லா நாமத்திற்கும்


 

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

இயேசுவின் நாமமே

எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்

நாமம் இயேசுவின் நாமமே

 

இயேசு நாமமே ஜெயம் ஜெயமே

சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்

 

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே

இயேசுவின் நாமமே

நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே

இயேசுவின் நாமமே

சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே

இயேசுவின் நாமமே

தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே

கிறிஸ்தேசுவின் நாமமே

Monday, 27 June 2022

Vaanathil oar Natchathiram வானத்தில் ஓர் நட்சத்திரம்


 

வானத்தில் ஓர் நட்சத்திரம்

என் உள்ளத்தில் இயேசு ராஜன்

 

 1. மாட்டுக்கொட்டினிலே தேவன் பிறந்தாரே

ஏழைக் கோலமாய் என் இயேசு பிறந்தாரே

 

2. தேவ தூதர்களும் விண்ணில் ஆர்ப்பரிக்க

மண்ணில் மனிதனாய் என் மன்னன் பிறந்தாரே

 

3. தேடி வந்த ராஜன் வாசம் செய்கிறாரே

  உள்ளம் நிறைந்து நாம் அவரைப் போற்றிடுவோம்


Tuesday, 21 June 2022

Thuthi Geethangalal துதி கீதங்களால்


 

துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்!

1 . தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!

2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்

3. உம்மைத் துதிக்கும் வேளையிலே
ஊக்கம் அளித்த கிருபையல்லோ
உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!

4. வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்

Friday, 17 June 2022

Senaiyathiban Nam Kartharuke சேனையதிபன் நம் கர்த்தருக்கே


 

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்குஅதை
அறிந்தே அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரேஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார்ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவேதுதி
சாற்றி ஆர்ப்பரிப்போம்ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்ஜெய