Wednesday 29 June 2022

Yesuvin Anbil Moolgavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்


 

1. இயேசுவின் அன்பில் மூழ்கவும்

  நேசத்தின் ஆழம் பார்க்கவும்

  இன்னமும் தீரா வாஞ்சையே

  என்னில் உண்டாகுகின்றதே.

 

  ஆட்கொண்டவர் நேசம்

  ஈடேற்றின  நேசம்

  இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்

  உன்னத அன்பைப் போற்றுவேன்.

 

2. இயேசுவின் சொல்லும் சித்தமும்

  ஆசையுள்ளோனாய்ச்  செய்யவும்

  தேவ ஒத்தாசை நம்புவேன்

  ஆவியின் பேரில் சாருவேன்

 

3. நாதரின் இன்ப சத்தமும்

  வேதத்தில் கேட்டு நித்தமும்

  ஆத்தும நன்மை நாடுவேன்

  நீதியின் பாதை செல்லுவேன்.

 

4. இயேசுவின் இராஜரீகமும்

  ஆசித்த மா செங்கோன்மையும்

  விண்ணிலே தோன்றும் வண்ணமாய்

  மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.


Tuesday 28 June 2022

Ella Namathirkum எல்லா நாமத்திற்கும்


 

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

இயேசுவின் நாமமே

எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்

நாமம் இயேசுவின் நாமமே

 

இயேசு நாமமே ஜெயம் ஜெயமே

சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்

 

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே

இயேசுவின் நாமமே

நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே

இயேசுவின் நாமமே

சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே

இயேசுவின் நாமமே

தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே

கிறிஸ்தேசுவின் நாமமே

Monday 27 June 2022

Vaanathil oar Natchathiram வானத்தில் ஓர் நட்சத்திரம்


 

வானத்தில் ஓர் நட்சத்திரம்

என் உள்ளத்தில் இயேசு ராஜன்

 

 1. மாட்டுக்கொட்டினிலே தேவன் பிறந்தாரே

ஏழைக் கோலமாய் என் இயேசு பிறந்தாரே

 

2. தேவ தூதர்களும் விண்ணில் ஆர்ப்பரிக்க

மண்ணில் மனிதனாய் என் மன்னன் பிறந்தாரே

 

3. தேடி வந்த ராஜன் வாசம் செய்கிறாரே

  உள்ளம் நிறைந்து நாம் அவரைப் போற்றிடுவோம்


Tuesday 21 June 2022

Thuthi Geethangalal துதி கீதங்களால்


 

துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்!

1 . தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!

2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்

3. உம்மைத் துதிக்கும் வேளையிலே
ஊக்கம் அளித்த கிருபையல்லோ
உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!

4. வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்

Friday 17 June 2022

Senaiyathiban Nam Kartharuke சேனையதிபன் நம் கர்த்தருக்கே


 

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்குஅதை
அறிந்தே அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரேஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார்ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவேதுதி
சாற்றி ஆர்ப்பரிப்போம்ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்ஜெய

Monday 13 June 2022

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்


 


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரேஎந்த

2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரேஎந்த

3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே என் பாதையில் நீரேஎந்த

4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரேஎந்த

5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர்எந்த

6. ஞான வைத்தியராம் ஒளஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரேஎந்த

7. ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரேஎந்த

8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரேஎந்த

9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரேஎந்த

10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் என் சர்வமும் நீரேஎந்த

Thursday 9 June 2022

Um Patham Paninthen உம் பாதம் பணிந்தேன்


 

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன்ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்உம்பாதம்

2. புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதேஉம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கிக் களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்றும் கண்டிடுவேன்உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன்உம்பாதம்