Wednesday, 6 April 2022

Viduthalai Nayagan விடுதலை நாயகன்


 


விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

1. நான் பாடிப்பாடி மகிழ்வேன்தினம்
ஆடி ஆடித்துதிப்பேன்எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்


Monday, 4 April 2022

Valvin Muthanmai Yesuvuke வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே


 


1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு

2. உயிருள்ளளவும் உண்மையாக
மரணம் வரினும் மலையாய் நிற்கநானும்

3. எண்ணற்ற ஜனங்கட்கு மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லைநானும்

4. இயேசுவை அறியாதார் மனம்மாற
சகல ஜாதியும் அடிபணியநானும்

5. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்பை அடைந்தோர் இணைந்து வாழநானும்

6. இந்தியா இயேசுவைக் கண்டிடவே
சுவிசேஷக் கொடி பறந்திடவே நானும்


Valthukirom Vanangukirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


 


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா

1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர்ஐயா

2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர்என்னை

3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம்ஐயா

4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம்ஐயா

5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரேஐயா

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரேஐயா


Sunday, 3 April 2022

Vathai Unthan Koodarathai வாதை உந்தன கூடாரத்தை


 


வாதை உந்தன கூடாரத்தை

அணுகாது மகனே

பொல்லாப்பு நேரிடாது

நேரிடாது மகளே

 

1. உன்னதமான கர்த்தரையே

உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை

ஆதாயமாக்கிக் கொண்டாய்

 

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்

சாத்தானை ஜெயித்து விட்டோம்

ஆவி உண்டு வசனம் உண்டு

அன்றாடம் வெற்றி உண்டு

 

3. கர்த்தருக்குள் நம் பாடுகள்

ஒரு நாளும் வீணாகாது

அசையாமல் உறுதியுடன்

அதிகமாய் செயல்படுவோம்

 

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர்

பரிசுத்தமாக்கிடுவார்

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்

குற்றமின்றி காத்திடுவார்

 

5. நம்முடைய குடியிருப்பு

பரலோகத்தில் உண்டு

வரப்போகும் இரட்சகரை

எதிர்நோக்கி காத்திருப்போம்

 

6. அற்பமான ஆரம்பத்தை

அசட்டை பண்ணாதே

தொடங்கினவர் முடித்திடுவார்

சொன்னதை செய்திடுவார்

 

7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல

ஆவியினால் ஆகும்

சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்

துணையாளர் முன் செல்கிறார்


Friday, 1 April 2022

Vanaanthira Yaathirail வனாந்திர யாத்திரையில்


 


வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார்வனாந்திர

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமேவனாந்திர

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையேவனாந்திர


Thursday, 31 March 2022

Vatraatha Neerutru Poliruppaai வற்றாத நீரூற்று போலிருப்பாய்


 


வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

 

1. வாய்க்கால்கள் ஓரம்

நடப்பட்ட மரமாய்

எப்போதும் கனி கொடுப்பாய்

தப்பாமல் கனி கொடுப்பாய்

 

2. ஓடும் நதி நீ

பாயும் இடத்தில்

உயிரெல்லாம் பிழைத்திடுமே

சுகமாக வாழ்ந்திடுமே

 

3. பலநாட்டு மக்கள்

உன் நிழல் கண்டு

ஓடி வருவார்கள்

பாடி மகிழ்வார்கள்

 

4. பஞ்ச காலத்தில்

உன் ஆத்துமாவை

திருப்தியாக்கிடுவார்

தினமும் நடத்திடுவார்

 

5. கோடைக் காலத்தில்

வறட்சிக் காலத்தில்

அச்சமின்றி இருப்பாய்நீ

ஆறுதலாய் இருப்பாய்


Yaar Ennai Kaivittalum யார் என்னைக் கைவிட்டாலும்


 


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்