Friday, 18 March 2022

Ellam Padaitha Namathu எல்லாம் படைத்த நமது


 


1. எல்லாம் படைத்த நமது

தயாபர பிதாவுக்கு

அனந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பெலன் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

பார்ப்பார் காப்பார்

வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும்

அவர் செய்கையால் விளங்கும்

 

2. மா நீசருக்கு மீட்பரும்

கர்த்தாவுமாம் சுதனுக்கும்

ரட்சிப்பின் அன்புக்காக

அல்லேலூயா புகழ்ச்சியும்

அநந்த ராஜரீகமும்

உண்டாய் இருப்பதாக

பாவம் சாபம்

எந்தத் தீங்கும் அதால் நீங்கும் என்றென்றைக்கும்

பாக்கியம் எல்லாம் கிடைக்கும்

 

3. மனந்திரும்பி  எங்களைப்

பர்த்தாவாம் யேசுவண்டையே

அழைத்து நேர்த்தியாகச்

சிங்காரிக்கும் தேவாவிக்கும்

அல்லேலூயா புகழ்ச்சியும்

வணக்கமும் உண்டாக

வான ஞான

வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார்

அதின் முன் ருசியைத் தாரார்

 

4. எல்லா ஜனங்களாலேயும்

பிதா குமாரன் ஆவிக்கும்

அநந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பலம் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

ஆமென் ஆமென்

நீர் ஆனந்தம் ஆதியந்தம் பரிசுத்தம்

பரிசுத்தம் பரிசுத்தம்.


Wednesday, 16 March 2022

Kalamo Selluthe காலமோ செல்லுதே


 


1. காலமோ செல்லுதே

வாலிபம் மறையுதே

எண்ணமெல்லாம் வீணாகும்

கல்வி எல்லாம் மண்ணாகும்

 

மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

 

2. கருணையின் அழைப்பினால்

மரண நேரம் வருகையில்

சுற்றத்தார் சூழ்ந்திட

பற்றுள்ளோர் கதறிட

 

3. துன்பமெல்லாம் மறைந்துபோம்

இன்னல் எல்லாம் மாறிப்போம்

வியாதி எல்லாம் நீங்கிப்போம்

நாயகன் நம் இயேசுவால்

 

4. வாழ்க்கையை இயேசுவால்

நாட்களைப் பூரிப்பாய்

ஓட்டத்தை முடித்திட

காத்துக் கொள் விசுவாசத்தை

 

5. உலகத்தின் மாந்தரே

கலங்காது வாருமேன்

இயேசுவை அண்டினால்

கிலேசங்கள் மாறிப்போம்


Monday, 14 March 2022

Kalangathe Kalangathe கலங்காதே கலங்காதே


 


கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடுநீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வாநீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார்உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம்தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்


Karthar Mel Barathai கர்த்தர் மேல் பாரத்தை


 


கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்


Sunday, 13 March 2022

Karthar Namam En Pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே


 


கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

4. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

 

 


Friday, 11 March 2022

Oppu Kodutheer Ayya ஒப்புக் கொடுத்தீர் ஐயா


 


ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

5. மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

6. என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்


Ayya Um Thirunamam ஐயா உம் திருநாமம்


 


ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்ஐயா

2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்ஐயா

3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்ஐயா

4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமேஐயா