Tuesday 11 January 2022

Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்


 

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே

1. தூதர்களே துதியுங்கள்
தூதர் சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

2. வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

3. அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

4. வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்


Monday 10 January 2022

Pitha Kumaran Parisutha Aaviyanavaram பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்


 


பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம் 

1. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக் கூடாத ஒளி தனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம்

2. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக் கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கீந்த
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

4. அனல் போல் சோதனை வந்தாலும்
அக்கினி ஊடாய் நடந்தாலும்
சோதனை நம்மை சூழ்ந்தாலும்
ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்

5. வானவர் விரைவில் வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைப்போமே
வானவருடன் சேர்ந்திடும் நாள்
விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்


Arputhar Arputhar Yesu Arputhar அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்


 

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

இயேசு அற்புதர்

அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்

இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்அற்புதர்

 

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்

தீர்த்த இயேசு அற்புதர்

எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்

காத்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்போனிலும் எங்கள்

இயேசு பெரியவர் அற்புதரே

உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்

இயேசு அற்புதரேஎல்லோரும்

 

2. அலைகடல் மேலே நடந்தவர்

எங்கள் இயேசு அற்புதர்

அகோர காற்றையும் அமைதிப்படுத்திய

இயேசு அற்புதர்

அறைந்தனர் சிலுவையிலே

ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே

ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த

இயேசு அற்புதரேஎல்லோரும்

Friday 7 January 2022

Yesu Nesikirar Avar இயேசு நேசிக்கிறார்


 

இயேசு நேசிக்கிறார்

அவர் அன்பாய் நேசிக்கிறார்

பாவி நான் என்றாலும்

தள்ளிவிடாமல் பாதுகாக்கின்றார்

கிருபை தருகின்றார்

 

1. அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தார்

ஆபத்துக்  காலத்திலே அரணான துணையானார்

ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்

அரவணைத்தாரே அன்பை அளித்தாரே

 

2. மாசற்ற தம் உதிரம் எனக்காக  சிலுவையிலே

மனதார அளித்தவரை மனம் நோகச்செய்தேனே

மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை

மாற்றி அமைத்தாரே மகிழச்  செய்தாரே


Thursday 6 January 2022

Yesu Kiristhuvin Anbu இயேசு கிறிஸ்துவின் அன்பு


 


இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

1. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

2. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்

3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பாரசிலுவை சுமந்தேகுதே


Wednesday 5 January 2022

Kasantha Mara Mathuramagum கசந்த மாரா மதுரமாகும்


 


1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார்

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்


Tuesday 4 January 2022

Appa Naan Ummai அப்பா நான் உம்மை


 


அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

 

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்

நீரே என் ஜீவனன்றோ

 

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

நான் உந்தன் பிள்ளையன்றோ

 

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே

நான் உந்தன் ஆட்டுக்குட்டி

 

4. ஜீவ நீருற்று நீர் தானே

உந்தன் மேல் தாகம் கொண்டேன்

 

5. என் பாடுகள் சுமந்து கொண்டீர்

என் துக்கம் ஏற்றுக்கொண்டீர்