Monday 3 January 2022

Entha Neramum Eppothumae எந்த நேரமும் எப்போதுமே


 


எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமேஎந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவசித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமேஎந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமேஎந்த

4. ஒவ்வொரு ஆண்டும் முழுவதும்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத்தத்தம் தந்து நடத்துவார்எந்த

5. குமாரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம்எந்த


Senaigalin Devan Nammodu Irukkintrar சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்


 


சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

 

1. எரிகோ போன்ற சோதனைகள்

எதிரிட்டு வந்தாலும்

தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்

ஜெயத்தைத் தந்திடுவார்  - சேனை

 

2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்

பாக்கியம் அடைந்திடுவோம்

உயர்த்திடுவார் தாங்கிடுவார்

நன்மையால் நிரப்பிடுவார்   - சேனை

 

3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும்

ஜெய கர்த்தர் நமக்குண்டு

ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்

ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் - சேனை

 

4. ஆவியின் வரத்தை தந்திடுவார்

ஆவியை பொழிந்திடுவார்

ஏகிடுவாய் எழும்பிடுவாய்

சீயோனில் சேர்ந்திடுவாய்  - சேனை

 

5. சபையோரே நாம் எழும்பிடுவோம்

வசனத்தைப் பிடித்திடுவோம்

வென்றிடுவோம் சென்றிடுவோம்

ஊழியம் செய்திடுவோம்  - சேனை


Sunday 2 January 2022

Thesamae Payapadathe Magilnthu தேசமே பயப்படாதே மகிழ்ந்து


 


Thesamae payapadaathe
Magilnthu kalikooru
Mannavar Yesu unthanuke
maberum kariyam seithiduvar

1. Selipana puthuvalvu
Thevane aruliduvar
Sugavalvu samathanam
Santhosham thanthiduvar

2. Malaipola varuvathellam
Pani pol marainthidumae
Unnatharin kirubaigalum
Unthanai soolnthidume

3. Thevanudan uravu kondu
Thinam thinam valnthiduvai
Immaiyilum marumaiyilum
Inpathai rusithiduvai


Friday 31 December 2021

Yesu Raja Munne Selkirar இயேசு ராஜா முன்னே செல்கிறார்


 

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

1. அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே


Thursday 30 December 2021

Magimai Matchimai Nirainthavarae மகிமை மாட்சிமை நிறைந்தவரே


 


மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் முடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்மகிமை

4. நித்திய தேவன் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம்மகிமை

5. அற்புத தேவன் நீரே
ஆசீர் அளிப்பவரே
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம்மகிமை


Wednesday 29 December 2021

Thuthipom Alleluah Padi துதிப்போம் அல்லேலூயா பாடி


 


துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமைதேவ
தேவனுக்கே மகிமைஅல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்

2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்

3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்

4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்

5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்


Tuesday 28 December 2021

Uyirodu Eluntha En Yesuvae உயிரோடு எழுந்த என் இயேசுவே


 


உயிரோடு எழுந்த என் இயேசுவே

நான் வாழுவேன் உமக்காகவே

நீர் ஒருவரே ஆண்டவர்

நீர் ஒருவரே ரட்சகர்

 

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சர்வ வல்லவரே

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சமாதான காரணரே

 

1. மரித்து போன அந்த லாசரு

அன்று தேடியே இயேசு வந்தீரே

உந்தன் வாயின் வார்த்தையால்

அங்கு ஜீவன் வந்தது

 

2. சிலுவையின் அந்த போரிலே

இயேசு நீரே மரித்து போனீரே

ஆனால் உயிரோடு எழுந்தீரே

அந்த எதிரியை ஜெயித்தீரே