Monday 27 September 2021

Sabayin Asthibaram சபையின் அஸ்திபாரம்


 

1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்
ஒரே விசுவாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்
எம்மட்டும் என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்

4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்
இளைப்பாறுவாரோடு
இன்ப இணக்கமும்
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்

Aadhiyum Neerae Andhamum Neerae ஆதியும் நீரே அந்தமும் நீரே


 

ஆதியும் நீரே அந்தமும் நீரே

மாறிடா நேசர் துதி உமக்கே

தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து

எந்நாளும் துதித்திடுவோம்


1. தூதர்கள் போற்றும் தூயவரே

துதிகளின் பாத்திரர் தேவரீரே

உந்தனின் சமூகம் ஆனந்தமே

உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்


2. வல்லமை ஞானம் மிகுந்தவரே

வையகம் அனைத்தையும் காப்பவரே

ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்

ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்


3. செய்கையில் மகத்துவம் உடையவரே

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே

பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்


4. ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்

ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்

உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே

உத்தம தேவனை பணிந்திடுவோம்


5.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்

பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்

மகிமையும் கனமும் துதிகளையே

செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்


Saturday 25 September 2021

Yesu Periyavar Nam Yesu Periyavar இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்


 

இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்
என்றென்றும் இயேசு பெரியவர்
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்

1.மனுஷனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்

2.அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்

3.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்

4. யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு

Anantham Kolluvaen ஆனந்தம் கொள்ளுவேன்


 

1. ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவிலே
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்

நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயுட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே

2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார்நான்

3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார்நான்

4. கூப்பிடும் வேளைகள் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார்நான்

5. பற்பல சோதனை எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம்நான்

Friday 24 September 2021

Aanantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி


 

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் ---

1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு ---

2. ஆதி நிலை ஏகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் ---

3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் ---

4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் ---

5. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் தரிப்போம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரில்
அனாதையாவதே இல்லை ---

6. பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்தர் மாளிகை எழும்பும் ---

7. தாவீதின் மைந்தன் தலையவர்
தாசரின் தலைகள் வணங்கும்
தேடிடும் தாசரின் கனம்
தேவாதி தேவனின் தியானம்
தலைவர்கள் எழுவார் எளியோரும் உயர்வார்
பணியாளர் திரண்டெழும் ஆண்டு ---

 

Wednesday 22 September 2021

Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்


 


1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா  உனக்காக

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுவாயோ  உனக்காக

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா  உனக்காக

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக  உனக்காக

Ratha Kottaikulle இரத்தக் கோட்டைக்குள்ளே


 

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்