Monday, 16 August 2021

Vaanil Parakkum Paravaigal வானில் பறக்கும் பறவைகள்


 

வானில் பறக்கும் பறவைகள்

மதுர கீதம் பாடிடும்

காட்டில் மலரும் பூக்கள்

அவரின் நாமம் போற்றிடும்

 

1. சூரிய சந்திரனும்

மகா நட்சத்திர கூட்டமும்

ஆகாயத்தின் விரியும்

அவரின் கிரியைகள் வர்ணிக்கும்

 

2. பொங்கும் கடல்களும்

பெருங்காற்றின் இரைச்சலும்

அடங்கும் அவரின் வார்த்தைக்கு

இயேசு நாமம் பெரியது

 

3. பூமியின் பிரபுக்களே

புவி ஆளும் மனிதரே

பெரியோர் முதல் பிள்ளைகளும்

இயேசு நாமம் போற்றுவீர்

Saturday, 14 August 2021

Alinthu Pokindra Aathumakkalai அழிந்து போகின்ற ஆத்துமாக்களை


 

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

2. திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

3. எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

4. கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

5. ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Friday, 13 August 2021

Alaganavar Arumaiyanavar அழகானவர் அருமையானவர்


 

அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே

2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே

3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்

Thursday, 12 August 2021

Ekkaalathum Karthar எக்காலத்தும் கர்த்தர்


 

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

உயர்வோ தாழ்வோ எந்நிலையோ

எந்தன் தஞ்சம் இயேசுவே

 

1.மண்ணின் வாழ்வும் மாயையாகும்

மனிதன் காண்பது பொய்யாகும்

மாறிடா நேசர் இயேசுவே

மாறாத அன்பு என்றும் போதுமே

 

2.அலைகள் மோதி எதிர்வந்தாலும்

 கலங்கிடேனே வாழ்க்கையிலே

அசையா எந்தன் நம்பிக்கை

நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

 

3.அவரை நோக்கி ஜெபிக்கும்போது

அருகில் வந்து உதவிசெய்வார்

கைவிடாமல் கருத்துடன்

காத்தென்னை என்றும் நடத்திடுவார்

 

4.தேவ பயமே ஜீவ ஊற்று

மரண கண்ணிக்கு விலக்கிடுமே

தேவ பாதையில் நடந்திட

தேவாவியானவர் உதவி செய்வார்

 

5.முன்னறிந்து அழைத்த தேவன்

முடிவு வரையும் நடத்திடுவார்

தேவ சாயல் மாறியே

தேவாதி தேவனை தரிசிப்பேனே

Adaikalamae Umathadimai அடைக்கலமே உமதடிமை


 

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
  உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
 

Wednesday, 11 August 2021

Siluvaiyil Araiyunda சிலுவையில் அறையுண்ட


 1. சிலுவையில் அறையுண்ட இயேசுவே

உம்மையே நோக்கி பார்க்கிறேன் 

என் பாவ சுமைகளோடு 

உம்  பாத நிழலில் நிற்கிறேன்

                        

இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி 

இன்றே உம்முடன் 

 வான்வீட்டில் என்னையும் சேருமே  


2. தந்தையே இவர்களை மன்னியும் 

அறியாமல் செய்தார்கள்  என்றீர் 

மாறாத இரக்கத்தால் என்னை 

மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே  --- இயேசுவே 


3. அம்மா இதோ உன் மகன் என்றீர்

இதோ உன் தாய் என்றே  நேசத்தால் 

அன்னையின் அன்பினில் நாளுமே 

என்னையும் வாழ்ந்திட செய்யுமே  ---இயேசுவே 

 

4. தாகமாய் உள்ளதே இறைவா 

ஏன் என்னை கை விட்டீர் என்றீரே 

கைவிடா நேசத்தால் எனக்கும் 

தாகம் மாற்றும் ஜீவநீரை  தாருமே  --- இயேசுவே 


5. தந்தையே உமது கையில் என் 

ஆவியை ஒப்படைக்கின்றேன் 

என்னையும்  உமது கரத்தில் 

முற்றிலும் கையளிக்கின்றேன்  --- இயேசுவே

Neer Illatha Naalellam நீர் இல்லாத நாளெல்லாம்


 

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்