1. இரத்த
சாட்சி கூட்டம் சத்திய பாதையில்
நித்தம்
தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன்
சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த
சுவிசேஷம் ஓங்குதே
போர்
வீரரே பூமி மாளுதே
பாய்ந்து
செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே
தேவ
ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே
தியாகப்
பரிசுத்தராய் சேவை செய்குவோம்
2. ஜாதி
மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப்
பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில்
மரித்தே உயிர்த்தெழுந்த
கர்த்தரின்
நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே
3. நாடு
நகரமோ காடு மலையோ
நாடி
தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும்
மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த
சாட்சி கூறுவோம் -போர் வீரரே
4. தாகமோ
பசியோ நோக்கிடாமலே
லோக
இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன்
வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும்
முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே
5. உன்னத
அழைப்பை என்றும் காத்திட
ஊக்கமாய்
உறுதியாய் தகுதி பெற்றிட
ஆவியிலே
அனலாய் நிலை நின்றிட
ஆண்டவர்
அருள் பொழிகுவார் -போர் வீரரே
6. சுத்த
ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய
வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு
வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல
விசுவாச சேவையில் -போர் வீரரே
7. பிரதி
பலன் ஏந்தி ஏசு வருவார்
பாடுபட்ட
கர்த்தரோடு நாமும் சேருவோம்
ஆதிப்பிதாக்களுடன்
ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்து
கூடி வாழுவோம் -போர் வீரரே