Wednesday 12 May 2021
Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி
Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி 1. ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே – பரலோக 2. சாவு துக்கம் அங்கே இல்லையே சாத்தானின் சேனை அங்கில்லையே கண்ணீர் கவலை அங்கில்லையே காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோக 3. பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோக 4. நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல் மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோக
Tuesday 11 May 2021
Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே
Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நிறைவாயே தேவாசீர்வாதங்கள் தங்கிடவே தேவன் அருள் ஈவாரே 1. ஆணி கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன் மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலக்கை நீட்டுகின்றார் 2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே கலங்காதே திகையாதே என் உள்ளமே கர்த்தர் துணை நிற்கின்றார் 3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவகுமாரன் உன்னோடிருப்பார் உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4. கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம்
Sunday 9 May 2021
Ulagum Vaanum உலகும் வானும்
Ulagum Vaanum 1. உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய் இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் 2. அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த் தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் 3. பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் 4. பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன் 5. இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ இறந்தோரிட நின்றே உயிரொ டெளுந்தாரெனவும் நம்புகிறேன் 6. சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன் 7. உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே
Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே விலை மதியாதோர் நல் பொக்கிஷமே விசுவாசமாம் கேடகம் தாங்கி விசுவாச பாதையில் முன்னேறுவோம் 1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும் மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி வருத்தம் போராட்டம் வந்தும் விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் 2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும் விசுவாசத்தாலே முன்னேறியே நாம் வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம் 3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை விசுவாச வீரர்கள் இழந்தனரே நல்ல போராட்டம் போராடியே நாம் விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம் 4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும் திடமான மனதுடன் நிலைத்திருப்போம் வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம் 5. பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம் இயேசுவை நோக்கி சீராக ஓடி விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்
Friday 7 May 2021
Seeonile En Thida சீயோனிலே என் திட
Seeonile En Thida
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)
1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே
2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார்
3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன்
4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி
5. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவுவரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே
Thursday 6 May 2021
Naan Pavasetrinile நான் பாவச் சேற்றினிலே
Naan Pavasetrinile 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஜென்ம கரும பாவங்கள் எல்லாம் தொலைத்தாரே மன்னித்து என்றும் மறந்து விட்டாரே மா பரமானந்தம் 3. என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே 4. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம் தூக்கி எறிந்தாரே 5. இரத்தாம்பரம் பொன் சிவப்பான இதய பாவங்களை பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார் 6. மேற்கு திசைக்கும் கிழக்குக்கும் மா எண்ணிலா தூரம் எந்தன் பாவங்கள் அத்தனை தூரம் இயேசு விலக்கினார் 7. நான் ஜலத்தினால் நல் ஆவியினால் நான் மறுபடியும் பிறந்தேன் தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக தேடிக்கொண்டேன் பாக்யம் 8. அங்கேயும் சீயோன் மலைமீதே ஆனந்தக் கீதங்களே ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ அன்பரைப் பாடிடுவேன்
Tuesday 4 May 2021
En Devan En Belane என் தேவன் என் பெலனே
En Devan En Belaneஎன் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே 1. தீங்கு நாளில் என்னை அவர் தம் கூடார மறைவினில் காத்திடுவார் தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்த்திடுவார் -என் தேவன் 2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன் அதையே அவரிடம் நாடிடுவேன் அவரின் முகமதை நான் காண அவரில் என்றும் நிலைத்திருப்பேன் -என் தேவன் 3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால் அவரால் இருதயம் ஸ்திரப்படுமே திட மனதோடு காத்திருந்தே அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே -என் தேவன்
Subscribe to:
Posts (Atom)