Wednesday 20 January 2021
Mangala Geethangal Padiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்
Mangala Geethangal Padiduvom1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கறை திரை நீக்கி திருச்சபையாக்கி காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே ராஜாதி ராஜன் இயேசுவோடே இன ஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து சென்றிடுவோம் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாக புறப்படுவோம் 4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே அவர் மணவாட்டி ஆக்கினாரே விருந்தறை நேச கொடி ஒளி வீச வீற்றிருப்போம் சிங்காசனத்தில் 5. தந்தத்தினால் செய்த மாளிகையில் தயாபரன் இயேசு புறப்பாடுவார் மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் மன்னன் மணாளன் வந்திடுவர்
Yesuvin Namam Onkidave இயேசுவின் நாமம் ஓங்கிடவே
Yesuvin Namam Onkidaveஇயேசுவின் நாமம் ஓங்கிடவே நேசமுடன் புகழ் பாடிடுவோம் காசினியில் நிகர் வேறதற்கில்லை தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம் வானமும் பூமியும் யாவையுமே வார்த்தையினால் உண்டாக்கினவர் என்னை மண்ணென்று நினைவாக்கினவர் எனக்கென்றும் சொந்தமவர் 1. அற்புதமாம் அதிசயமாம் ஆண்டவர் இயேசுவின் நாமமதே பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே 2. வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர் வாழ்த்தி வணங்கிடும் நாமமதே மானிடரின் முழங்கால் முடங்கும் மெய் மேன்மை உயர் திரு நாமமதே 3. சாவு பயங்கள் நீங்கிடவே சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே சோதனையில் பல வேதனையில் என் சொந்த அடைக்கல நாமமதே 4. வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே -தம் நாமமதை நான் போற்றிடுவேன்
Monday 18 January 2021
Potriduven Paraparanai போற்றிடுவேன் பராபரனை
Potriduven Paraparanaiபோற்றிடுவேன் பராபரனை சாற்றிடுவேன் சர்வவல்லவரை ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் என்றும் பாடுவேன் ஆ ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி போல் கருத்துடனே கைவிடாமல் என்னைக் காத்தனரே 1. எத்தனையோ பல நன்மைகள் இத்தனை ஆண்டுகளாய் அளித்தார் கர்த்தரே நல்லவர் என்பதையே கருத்துடனே ருசித்திடுவேன் 2. பயப்படாதே என்றுரைத்தனரே பரிசுத்த ஆவியானவரே வெள்ளம் போல் சத்துரு வந்திடினும் விரைந்தவரே கொடியேற்றினார் 3. பொருத்தனைகள் துதி பலிகள் பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன் ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன் ஆண்டவரே செவி கொடுப்பார் 4. நித்தமும் போதித்து நடத்தி நித்திய ஆலோசனை அளிப்பார் முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார் மகிழ்ந்திடுவேன் நித்தியமாய்
Sunday 17 January 2021
Theevinai Seiyathe தீவினை செய்யாதே
Theevinai Seiyathe1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார் மீட்பர் பெலனை ஈவார் ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
Friday 15 January 2021
Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா
Sthothiram Yesu Natha1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் 5. இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே 6. நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே
Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா
Sthothiram Thuthi Pathiraஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உம்மையும் எனக்காக 1. வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன் எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே அல்லல் யாவும் அறுத்தீரே அலையும் என்னையும் மீட்டீரே 2. நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன் அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்குந்தன் தயவாலே 3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எங்கள் துணை நீரே 4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன் 5. அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன் அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உம்மையே துதித்திடுவேன்
Tuesday 12 January 2021
Ontrum illatha Nilaimaiyile ஒன்றும் இல்லாத நிலைமையிலே
Ontrum illatha Nilaimaiyileஒன்றும் இல்லாத நிலைமையிலே சகலமும் படைப்பவர் நம் தேவன் அவரே தேவன் அவரே தேவன் யேகோவா நல்தேவன் 1. பஞ்சத்தால் உள்ளம் சோர்ந்து போனாலும் கோதுமை மணிகள் அற்றுப் போனாலும் எலிசாவின் தேவன் நம்முடன் உண்டு (2) எண்ணிலடங்கா அற்புதம் செய்வார் அவர் --- அவரே 2. எதிரியின் கூட்டங்கள் மிகுந்து போனாலும் எல்லாமே தோல்வியாய் முடிந்து போனாலும் தாவீதின் தேவன் நம்முடன் உண்டு (2) ஜெயத்தின் மேல் ஜெயமே தந்திடுவாரே அவர் --- அவரே 3. சாத்தானின் சோதனை நம்மை சூழ்ந்தாலும் செல்வமும் சொந்தமும் விட்டுப் போனாலும் யோபுவின் தேவன் நம்முடன் உண்டு (2) இரட்டைத்தனையாய் பலன் தருவார் அவர் ---அவரே 4. பானையில் மாவு குறைந்து போனாலும் ஜாடியில் எண்ணெய் தீர்ந்து போனாலும் எலியாவின் தேவன் நம்முடன் உண்டு (2) காகத்தை அனுப்பி தினம் போஷிப்பார் அவர் --- அவரே
Subscribe to:
Posts (Atom)