Friday 7 August 2020

Arasanai Kanamal அரசனைக் காணாமல்

Arasanai Kanamal அரசனைக் காணாமலிருப்போமோ – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே – அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை

Wednesday 5 August 2020

Karthar Unnai கர்த்தர் உன்னை

Karthar Unnai கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்கு வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Tuesday 4 August 2020

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ ஆ 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு — ஆ ஆ 2. ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் — ஆ ஆ 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் — ஆ ஆ 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் — ஆ ஆ 5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் தரிப்போம் அனாதி தேவன் அடைக்கலம் பாரில் அனாதையாவதே இல்லை – ஆ ஆ 6. பார் போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்கியம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும் – ஆ ஆ

Sunday 2 August 2020

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம்

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் – என்

Friday 31 July 2020

Enakkai Jeevan Vittavare எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakkai Jeevan Vittavare 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே — இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் — இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் — இயேசு

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர்

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ கலங்கிடும் மாந்தரே உன் கண்ணீரை துடைத்திடு கவலையை விட்டு விட்டு வா இயேசுவைப் பின்பற்றி வா 1. காற்றும் கடலும் எதற்காக கனிமரமெல்லாம் எதற்காக சூரிய சந்திரனும் எதற்காக அத்தனையும் அது உனக்காக 2. மலையும் மலர்களும் எதற்காக நிலமும் நீரும் எதற்காக பாடும் பறவைகள் எதற்காக அத்தனையும் அது உனக்காக 3. சிலுவை சுமந்தது எதற்காக சிந்தின இரத்தம் எதற்காக ஜீவனை கொடுத்தது எதற்காக அத்தனையும் அது உனக்காக

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்