Monday 27 July 2020

Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே



Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நாதன் செய்பல நன்மைகட்காய் நாள்தோறும் நலமுடன் காத்தனரே நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா நன்றியால் ஸ்தோத்தரிப்போம் 1. கடந்த வாழ்நாளெல்லாம் கருத்துடனே கண்மணிபோல் நம்மைக் காத்தனரே கண்ணீர் கவலையினை மாற்றினாரே கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால் 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து ஜீவிய பாதை நடத்தினாரே ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம் ஜீவனின் அதிபதியை அல்லேலூயா ஜீவனின் அதிபதியை – நன்றியால் 3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே அதிசயங்கள் பல புரிந்தனரே ஆயிரம் நாவுகள் தான் போதுமா ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா ஆண்டவரைத் துதிக்க – நன்றியால் 4. பாவ சேற்றில் அமிழ்ந்த நம்மை பாசக் கரம் கொண்டு தூக்கினாரே கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர் கருத்துடன் காத்தனரே அல்லேலூயா கருத்துடன் காத்தனரே – நன்றியால் 5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம் ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

O Perfect Love


O Perfect Love all human thought transcending Lowly we kneel in prayer before Thy throne That theirs may be the love which knows no ending Whom Thou forever more dost join in one. O Perfect Life, be Thou their full assurance of tender charity and steadfast love of patient hope and quiet brave endurance with childlike trust that fears no pain or death. Grant them that joy that brightens earthly sorrow Grant them the peace which calms all earthly strife and to life's day the glorious unknown morrow that dawns upon eternal love and life.

Sunday 26 July 2020

Aandava Prasannamagi ஆண்டவா பிரசன்னமாகி

Aandava Prasannamagi 1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர் 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடு கூடினோம் உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம் 3. ஆண்டவா மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஜுவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர் 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே கடாட்சியும் பெந்தேகோஸ்தின் திவ்ய ஈவை தந்து ஆசிர்வதியும்

God Is Here


1. God is here and that to bless us With the Spirit’s quickening power See the cloud already bending, Waits to drop the grateful shower. Let it come O Lord we pray Thee Let the shower of blessing fall We are waiting we are waiting Oh revive the hearts of all. 2. God is here we feel His presence in this consecrated place But we need the soul refreshing Of His free unbounded grace 3. God is here oh then believing Bring to Him our one desire that His love may now be kindled till its flame each heart inspire 4. Saviour grant the prayer we offer While in simple faith we bow from the windows of Thy mercy Pour us out a blessing now.

Tuesday 21 July 2020

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாட வானில் வெள்ளி ஜொலித்திட ஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு பாலன் ஜெயமனுவேலன் சீயோனின் ராஜா சாரோனின் ரோஜா சமாதான தேவன் சாந்த சொரூபி நித்தியர் பிறந்தாரே.

Monday 20 July 2020

Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம்


Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே 1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்திதரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழி நடத்தும் 2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய்

Sunday 19 July 2020

O Paavangal Ethanaiyo ஓ பாவங்கள் எத்தனையோ



O Paavangal Ethanaiyo 1. ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ 4. ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணியதோ நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ