Valvin Oliyanar வாழ்வின் ஒளியானார் இயேசு வாழ்வின் ஒளியானார்என்னை மீட்க இயேசு ராஜன் வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின்1. அக்கிரமங்கள் பாவங்களால் நிரம்ப பெற்ற பாவியென்னை அன்பு கரங்கள் நீட்டியே தம் மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 2. வழி தப்பி தடுமாறும் போது வழிகாட்டியாய் செயல்படுவார் வழியில் இருளாய் மாறும் போது வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 3. துன்பங்கள் தொல்லை வரினும் இன்னல்கள் பல வந்திடினும் இன்னல் தீர்க்க வல்ல இயேசு இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்
Yesuvuke Opuvithen
1. யேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன் 2. யேசுவுக்கே ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன் 3. யேசுவுக்கே ஒப்புவித்தேன்ஏற்றுகொண்டருளுமேன் நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியாம் 4. யேசுவுக்கே ஒப்புவித்தேன்நாதா அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்
Aathumave Sthothiri
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்