Sunday, 29 December 2019

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு 3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப் பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது (2) அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் (2) ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் (2) என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் (2) என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச 4. பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக (2) என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச

Sunday, 22 December 2019

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம்

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 1. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Vinnil Oor Natchathiram Thontridave விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

Vinnil Oor Natchathiram 1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 2. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க 1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் – பிறந்தார்

Saturday, 21 December 2019

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே --- தேவ பாலன் 1.மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன் 2.பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தரே பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன்

Friday, 20 December 2019

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே (2) 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் 3. இந்த மாடடை தொழுவத்திலே அவர் மானிடனாய் பிறந்தார் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்