Saturday, 7 December 2019

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம் மேய்ப்பர் வருகிறார் அல்லேலுயா பாடுவோம் மேய்ப்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து வேதத்தின் ஓளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார் அல்லேலுயா பாடுவோம் தேவ மைந்தரை வாழ்த்துவோம்

Wednesday, 4 December 2019

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் 1.இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் 2.பூலோக மேன்மைகள் தேடாதவர் பேரும் புகழும் நாடாதவர் ஒன்றான மெய் தேவன் இயேசுவே என் ஆத்ம இரட்சகரே 3.ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர் தேவாதி தேவன் சுதன் இவர் இயேசுவல்லால் வேறு யாருமில்லை இரட்சண்யம் ஈந்திடவே 4.ஆடம்பர வாழ்வை வெறுத்தவர் அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர் எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும் இயேசுவைப் பின்பற்றுவோம் 5.எங்கள் சமாதானப் பிரபு இவர் இயேசு அதிசயமானவர் வேதம் நிறைவேறும் காலமே வேகம் வருகின்றாரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே--- இயேசு 2.ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே --- இயேசு 3.மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே --- இயேசு 4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே – வான சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு 5.அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு 6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு

Tuesday, 3 December 2019

Rajan Thaveethurillulla ராஜன் தாவீதூரிலுள்ள


Rajan Thaveethurillulla 1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா, மரியம்மாள்தான் பாலன் இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார் மா கர்த்தாதி கர்த்தரே அவர் வீடோ மாட்டுக் கொட்டில் தொட்டிலோ முன்னணையே ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பால்ய பர்வம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம் சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார் பலவீன மாந்தன் போல துன்பம் துக்கம் சகித்தார் இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மை கண்ணால் கண்டு களிப்போம் அவர் தாமே மோட்ச லோக நாதர் என்று அறிவோம் பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே 6. மாட்டுத் தொழுவத்திலல்ல தெய்வ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜ கிரீடம் சூடியும் மீட்பர் வீற்றிருக்கின்றார் பாலர் சூழ்ந்து போற்றுவார்

Monday, 2 December 2019

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட 2.கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம் பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட 3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே இதை நாடுவோர்க்கு விடுதலையே துன்ப கட்டுகள் காவல் சிறைகள் இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட 4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார் அதிசயங்கள் அவர் காட்டிடுவார் உண்மை நிறைந்த உள்ளம் திறந்து உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட 5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே கடைசி வரை தளராதே நம்பு என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர் இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட

Sunday, 1 December 2019

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 4. இயேசுவே, வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லேகேமில் கூடுங்கள் ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே லோகம் ஆளும் நாதரே ஏற்ற காலம் தோன்றினீர் கன்னியிடம் பிறந்தீர் வாழ்க நர தெய்வமே அருள் அவதாரமே நீர் இம்மானுவேல் அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவே வாழ்க நீதி சூரியனே மீட்பராக வந்தவர் ஒளி ஜீவன் தந்தவர் மகிமையை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்து சாவை வெல்லப் பிறந்தீர் மறு ஜென்மம் அளித்தீர்