Tuesday, 15 October 2019

Erukintaar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

Erukintaar Thalladi Thavalnthu
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க

Hosanna Paduvom Yesuvin Thasare ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே

Hosanna Paduvom Yesuvin Thasare
ஓசன்னா பாடுவோம்  ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்

Monday, 14 October 2019

Raakkalam Bethlem Meipargal ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Raakkalam Bethlem Meipargal
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Piranthar Piranthar Vanavar பிறந்தார் பிறந்தார் வானவர்

Piranthar Piranthar Vanavar
பிறந்தார் பிறந்தார்
  புவி மானிடர் புகழ்  பாடிட பிறந்தார்  (2)

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Thursday, 10 October 2019

Bavani Selgintrar Rasa பவனி செல்கின்றார் ராசா

Bavani Selgintrar Rasa
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!
                அனுபல்லவி
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். — பவனி
               சரணங்கள்
1. எருசலேமின் பதியே! – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! — பவனி

2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. — பவனி

3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.   — பவனி

Hosanna Palar Paadum Rajavaam ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம்

Hosanna Palar Paadum Rajavaam
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

Tuesday, 8 October 2019

En Nesare En Aathma Nayagare என் நேசரே என் ஆத்ம நாயகரே

En Nesare En Aathma Nayagare
என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே உம்மில் நான் சேர்ந்திடவே
என் இயேசுவே மத்ய வானில் வேகம் வந்திடுவீர்

விண்மேகத்தில் தூத கணங்களுடன் வரும் நேரம்
எனக்காய் காயப்பட்டதாம் பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும் வாஞ்சிக்கிறேன்

வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும் ஆயத்தமே

சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் நேசரே