Wednesday, 31 July 2019

Ekkaalathum Karthar Yesuvai

எக்காலத்தும் கர்த்தர்  இயேசுவை
 எந்தன்  துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம்  இயேசுவே
1.  மண்ணின் வாழ்வு மாயையாகும்
     மனிதன் காண்பது பொய்யாகும்
     மாறிடா நேசர் இயேசுவை
     மாறாத  அன்பு என்றும் போதுமே --  எக்காலத்தும்
2.  அலைகள் மோதி  எதிர்வந்தாலும்
     கலங்கிடேனே வாழ்க்கையிலே
    அசையா எந்தன் நம்பிக்கை
    நங்கூரம்  எந்தன் இயேசு போதுமே  --  எக்காலத்தும்
3.  அவரை   நோக்கி ஜெபிக்கும் போது
     அருகில் வந்து உதவி செய்வார்
    கைவிடாமல் கருத்துடன்
    காத்தென்னை என்றும் நடத்திடுவார்  --  எக்காலத்தும்
4.  தேவ பயமே ஜீவ ஊற்று
     மரண கண்ணிக்கு விலக்கிடுமே
    தேவ பாதையில் நடந்திட
    தேவாவியானவர் உதவி செய்வார்  --  எக்காலத்தும்
5.  முன்னறிந்து அழைத்த தேவன்
     முடிவு வரையும் நடத்திடுவார்
     தேவ சாயல்  மாறியே
     தேவாதி தேவனை துதித்திடுவேன்  --  எக்காலத்தும்

Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே

Thanthaen Ennai Yesuvae

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
               அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்
                  சரணங்கள்
     1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்

Tuesday, 30 July 2019

Paavam Peruguthae பாவம் பெருகுதே

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே

1. ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்

3. தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்

4. எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே

5. ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்

6.வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்

Sunday, 28 July 2019

Parama Erusalame Paralogam பரம எருசலேமே பரலோகம்

Parama Yerusalame Paralogam

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

Thursday, 25 July 2019

Naan Piramithu Nintru Peranbin நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

Naan Piramithu Nintru  Peranbin

1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன்

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார்

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார்

Paava Thosham Neekida பாவ தோஷம் நீக்கிட


Paava Thosam Neekida  பாவ தோஷம் நீக்கிட

1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

                        பல்லவி

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!

3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே!

4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

Have You Been To Jesus For The Cleansing Pow'r

1.Have you been to Jesus for the cleansing pow’r?
Are you washed in the blood of the Lamb?
Are you fully trusting in His grace this hour?
Are you washed in the blood of the Lamb?
 
     Are you washed in the blood,
    In the soul-cleansing blood of the Lamb?
    Are your garments spotless? Are they white as snow?
    Are you washed in the blood of the Lamb?

2.Are you walking daily by the Savior’s side?
Are you washed in the blood of the Lamb?
Do you rest each moment in the Crucified?
Are you washed in the blood of the Lamb?

3.When the Bridegroom cometh will your robes be white!
Are you washed in the blood of the Lamb?
Will your soul be ready for His presence bright,
And be washed in the blood of the Lamb?

4.Lay aside the garments that are stained with sin,
And be washed in the blood of the Lamb;
There’s a fountain flowing for the soul unclean,
O be washed in the blood of the Lamb.