சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)
ஆ.. ஆ.. ஆ.. இது
அதிசயம் தானே
ஓ.. ஓ.. ஓ.. இது
உண்மைதானே
1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசு தான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா
2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
3. பரலோகத்தில்
எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான்
4. ஊரெல்லாம்
சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்