Sunday, 3 April 2022

Vathai Unthan Koodarathai வாதை உந்தன கூடாரத்தை


 


வாதை உந்தன கூடாரத்தை

அணுகாது மகனே

பொல்லாப்பு நேரிடாது

நேரிடாது மகளே

 

1. உன்னதமான கர்த்தரையே

உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை

ஆதாயமாக்கிக் கொண்டாய்

 

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்

சாத்தானை ஜெயித்து விட்டோம்

ஆவி உண்டு வசனம் உண்டு

அன்றாடம் வெற்றி உண்டு

 

3. கர்த்தருக்குள் நம் பாடுகள்

ஒரு நாளும் வீணாகாது

அசையாமல் உறுதியுடன்

அதிகமாய் செயல்படுவோம்

 

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர்

பரிசுத்தமாக்கிடுவார்

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்

குற்றமின்றி காத்திடுவார்

 

5. நம்முடைய குடியிருப்பு

பரலோகத்தில் உண்டு

வரப்போகும் இரட்சகரை

எதிர்நோக்கி காத்திருப்போம்

 

6. அற்பமான ஆரம்பத்தை

அசட்டை பண்ணாதே

தொடங்கினவர் முடித்திடுவார்

சொன்னதை செய்திடுவார்

 

7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல

ஆவியினால் ஆகும்

சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்

துணையாளர் முன் செல்கிறார்


Friday, 1 April 2022

Vanaanthira Yaathirail வனாந்திர யாத்திரையில்


 


வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார்வனாந்திர

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமேவனாந்திர

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையேவனாந்திர


Thursday, 31 March 2022

Vatraatha Neerutru Poliruppaai வற்றாத நீரூற்று போலிருப்பாய்


 


வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

 

1. வாய்க்கால்கள் ஓரம்

நடப்பட்ட மரமாய்

எப்போதும் கனி கொடுப்பாய்

தப்பாமல் கனி கொடுப்பாய்

 

2. ஓடும் நதி நீ

பாயும் இடத்தில்

உயிரெல்லாம் பிழைத்திடுமே

சுகமாக வாழ்ந்திடுமே

 

3. பலநாட்டு மக்கள்

உன் நிழல் கண்டு

ஓடி வருவார்கள்

பாடி மகிழ்வார்கள்

 

4. பஞ்ச காலத்தில்

உன் ஆத்துமாவை

திருப்தியாக்கிடுவார்

தினமும் நடத்திடுவார்

 

5. கோடைக் காலத்தில்

வறட்சிக் காலத்தில்

அச்சமின்றி இருப்பாய்நீ

ஆறுதலாய் இருப்பாய்


Yaar Ennai Kaivittalum யார் என்னைக் கைவிட்டாலும்


 


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்


Tuesday, 29 March 2022

Mannorai Meetka Vantha Rajave மண்ணோரை மீட்க வந்த ராஜாவே


 


1. மண்ணோரை மீட்க வந்த ராஜாவே

விண்ணின்று மீண்டும் வாருமே

மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க 

விண் தூதரோடு வாருமே

 

பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்

பேரின்பத்தோடு வாழ்வதற்கு

வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி

சென்ற எம் தேவா வாருமே

 

2. அறியாத நேரம் வருவேனென்றீரே

அடியார்கள் என்றும் ஊக்கத்தோடே

விசுவாசம் அன்பு நம்பிக்கையோடு

விழித்திருக்க அன்பால் அருள் தாருமே

 

நித்திரை செய்யும் தேவ தாசரும்

இத்தரை வாழ்வு பெற்ற நாமும்

கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல

கெம்பீரமாக வாருமே


Monday, 28 March 2022

Magimaiyin Nambikkaiye மகிமையின் நம்பிக்கையே

 





மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்


Magimai Umakkantro மகிமை உமக்கன்றோ


 


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ

ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

1.விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2.வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3.எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4.உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ