Wednesday 18 August 2021

Thuthippathae En Thaguthiyallo துதிப்பதே என் தகுதியல்லோ


 

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

1. வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார்துதிப்பதே

2. வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார்துதிப்பதே

3. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்துதிப்பதே

4. ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார்துதிப்பதே

5. வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார்துதிப்பதே

6. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்துதிப்பதே

Tuesday 17 August 2021

Inbamithae Paerinbamithae இன்பமிதே பேரின்பமிதே


 

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே

1.பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே

2.நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே

3.ஜீவ பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே

4.சாவு பயங்கள் நீக்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே

5.தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே

Monday 16 August 2021

Avar Enthan Sangeethamaanavar அவர் எந்தன் சங்கீதமானவர்


 

அவர்  எந்தன் சங்கீதமானவர்

பெலமுள்ள கோட்டையுமாம்

ஜீவனின் அதிபதியான அவரை

ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

 

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே

வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்

திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே

 

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்

இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்

இருப்பேன் என்றவர் நமது தேவன்

இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

 

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை

வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்

வருகையில் அவரோடு இணைந்து என்றும்

வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Ayiram Ayiram Padalgalai ஆயிரம் ஆயிரம் பாடல்களை


 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை

ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்

யாவரும் தேமொழிப் பாடல்களால் 

இயேசுவைப் பாடிட வாருங்களேன் 


அல்லேலூயா  அல்லேலூயா 

என்றெல்லாரும் பாடிடுவோம் 

அல்லலில்லை  அல்லலில்லை 

ஆனந்தமாய்ப் பாடிடுவோம் 


2. புதிய புதிய பாடல்களைப் 

புனைந்தே பண்களும் சேருங்களேன்

துதிகள் நிறையும் கானங்களால்

தொழுதே இறைவனைக் காணுங்களேன்


3. நெஞ்சின் நாவின் நாதங்களே

நன்றி கூறும் கீதங்களால்

மிஞ்சும் ஓசைத் தாளங்களால் 

மேலும் பரவசம் கூடுங்களேன்


4. எந்த நாளும் காலங்களும் 

இறைவனைப் போற்றும் நேரங்களே

சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்

சீயோனின் கீதம் பாடுங்களேன்

Vaanil Parakkum Paravaigal வானில் பறக்கும் பறவைகள்


 

வானில் பறக்கும் பறவைகள்

மதுர கீதம் பாடிடும்

காட்டில் மலரும் பூக்கள்

அவரின் நாமம் போற்றிடும்

 

1. சூரிய சந்திரனும்

மகா நட்சத்திர கூட்டமும்

ஆகாயத்தின் விரியும்

அவரின் கிரியைகள் வர்ணிக்கும்

 

2. பொங்கும் கடல்களும்

பெருங்காற்றின் இரைச்சலும்

அடங்கும் அவரின் வார்த்தைக்கு

இயேசு நாமம் பெரியது

 

3. பூமியின் பிரபுக்களே

புவி ஆளும் மனிதரே

பெரியோர் முதல் பிள்ளைகளும்

இயேசு நாமம் போற்றுவீர்

Saturday 14 August 2021

Alinthu Pokindra Aathumakkalai அழிந்து போகின்ற ஆத்துமாக்களை


 

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

2. திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

3. எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

4. கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

5. ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Friday 13 August 2021

Alaganavar Arumaiyanavar அழகானவர் அருமையானவர்


 

அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே

2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே

3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்