Wednesday 25 November 2020

Sthotharipen Sthotharipen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 Sthotharipen Sthotharipen

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

Nandriyaal Nenjam Nirainthiduthe நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே


 Nandriyaal Nenjam Nirainthiduthe

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே 1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் நீர்நிலைகள் சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள் தூயநல் தேன் மலர் தீங்கனிகள். 2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள் எழிலுடன் குழந்தைச் செல்வங்கள் துன்புறும் வேளையில் துணைக்கரங்கள் துதித்திட சொல்லுடன் ராகங்கள் 3. உறவுகள் மகிழ்ந்திட நல் நண்பர் உதவிகள் செய்திட பல்பணியர் அறவழி காட்டிட அருள் பணியர் அன்புடன் ஏற்றிட ஆண்டவர் 4.உருவுடன் விளங்கிட ஓருடலம் உடலதில் இறைவனுக்கோர் இதயம் பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய திருமறை பேசிடும் வானுலகம்

Monday 23 November 2020

Nandriyal Padiduvom நன்றியால் பாடிடுவோம்


 Nandriyal Padiduvom

நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெருங் கிருபை மாநிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியாய் 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர் 6. உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 7. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே

Friday 20 November 2020

Kartharai Naan Ekkalathilumey கர்த்தரை நான் எக்காலத்திலுமே


 Kartharai Naan Ekkalathilumey

கர்த்தரை நான் எக்காலத்திலுமே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே கருத்துடனே துதிப்பேன் 1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும் ஆதலால் கலக்கமில்லை அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக் காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை 2.இவ்வேளை கூப்பிட்டான் கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்த்தார் அவர் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கினார் இரட்சிப்பை அருளிச் செய்தார் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை

Tuesday 17 November 2020

Konja Kaalam Yesuvukkaaga கொஞ்ச காலம் இயேசுவிற்காக


 Konja Kaalam Yesuvukkaaga

கொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்தநாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் – கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

Udaintha Ullamathai உடைந்த உள்ளமதை


 Udaintha Ullamathai

உடைந்த உள்ளமதை தேற்றிடும் யேசுநாதா (2) காரிருள் சூழ்கையிலே காத்திடும் கரத்தினால் (2) ஆ ... ஆ ... ஆ ... 1. நேசித்தவர்கள் கைவிட்டபோது நெஞ்சம் உருகியே நின்றேன் (2) என் நேசர் எங்கே என் நேசர் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 2. கண்ணீரின் பாதையைக் கடக்கும்போது துணையாய் யாருமே இல்லை (2) யாரிடம் செல்வேன் யாரிடம் செல்வேன் என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 3. ஆறுதலற்ற வாழ்வினைக் கண்டு துக்கத்தால் வாடியே போனேன் (2) ஆறுதல் எங்கே ஆறுதல் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ...

Sunday 15 November 2020

Thollai Kashtangal Soolnthidum தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


 Thollai Kashtangal Soolnthidum

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் 3.என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின்செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிட மாட்டார்