1. Safely through another week
God has brought us on our way
let us now a blessing seek
waiting in his courts today
day of all the week the best
emblem of eternal rest.
2. While we pray for pardoning grace
through the dear Redeemer's name
show thy reconciled face
take away our sin and shame
from our earthly cares set free
may we rest this day in thee
3. Here we come thy name to praise
let us feel thy presence near
May thy glory meet our eyes
while we in thy house appear
here afford us, Lord, a taste
of our everlasting feast.
4. May thy gospel's joyful sound
conquer sinners, comfort saints
may the fruits of grace abound
bring relief for all complaints
thus may all our Sabbaths prove
Till we join the church above
Vaaram Mutrum Shemamaai
1. வாரம் முற்றும் ஷேமமாய்
தேவன் காத்தார் தயவாய்
ஆலயத்தில் கூடுவோம்
வேதங் கேட்டு வாழ்த்துவோம்
வாரத்தில் மேலானதே
மோட்சம் காட்டும் நாள் இதே
2. யேசுநாதர் ரத்தத்தால்
நீதியை நாம் பெற்றதால்
நேசர் அவர் நாமத்தில்
கூடி வேதங் கேட்கையில்
லோக வேலை விட்டோய்வோம்
வாஞ்சையோடாராதிப்போம்
3. தேவ ஆவி அருளால்
தேவ அன்பைக் காண்பதால்
ஆவலாகப் போற்றுவோம்
தேவ சாயல் ஆகுவோம்
மோட்ச வீட்டின் வாழ்விலே
வாழ்வோமாக பாலரே
4. மாசிலா யெருசலேம்
நாம் வசிக்கும் ஆலயம்
நீதி அங்கி பெற்றதால்
ஜோதியுள்ளோர் யேசுவால்
வாரம் தோறும் பாடுவோம்
வேதம் ஓதிப் போற்றுவோம்
Oru Varthai Sollum
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு
Anathi Devan Un Adaikalame
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த
2. கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே --- இந்த
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் --- இந்த
4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த
5. ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த
En Thevan En Velicham
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில்
வைத்து காத்திடுவார் கன்மலை
மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து
என்னைக் காத்து நின்றார் என்னை
பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – என்
Vananthira Yatherayil
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் (2)
என் வாழ்வு செழித்திடுமே
1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கொன்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர