Monday, 20 July 2020

Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம்


Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே 1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்திதரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழி நடத்தும் 2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய்

Sunday, 19 July 2020

O Paavangal Ethanaiyo ஓ பாவங்கள் எத்தனையோ



O Paavangal Ethanaiyo 1. ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ 4. ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணியதோ நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ

Saturday, 18 July 2020

Engae Oduvai எங்கே ஓடுவாய்



Engae Oduvai எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்து எங்கே ஓடுவாய் பாவ மன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1. பாவ இன்பத்தை பால் போல் பருகி தேவ் கோபத்தை தேடி ஓடுறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுறாய் 2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன் மரித்த பின்பு உயிர்த்திடுமே 3. மரண தூதன் அருகிலிருக்கிறான் நரகத்தை விரிவாய் திறந்திருக்கிறான் கிருபையை நீ கருத்தில் எண்ணி குருசை நோக்கி கொல்கத்தாவாண்டை வா 4. விருதாவாகப் பொருள் சேர்க்கிறாய் வேகமாகவே திரிந்தலைகிறாய் ஆஸ்தி சேர்க்கிறாய் அழிவைக் காண்கிறாய் அடுத்தவனுக்கு அதை விட்டுப் போகிறாய் 5. உன் இருதயம் மேட்டிமை கொண்டு உன் அகந்தையால் அழிந்து போகிறாய் உலக இன்பம் ஒரு நிமிஷமே உன்னத இன்பம் நித்திய காலமே

Wednesday, 15 July 2020

Anbin Uruvam Aandavar அன்பின் உருவம் ஆண்டவர்


Anbin Uruvam Aandavar 1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா 2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே – ஓடிவா 3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே – ஓடிவா 4. ஒருமுறை அன்பை ருசித்துமே விழுந்துபோன நீ எழும்பிவா பலமுறை துரோகம் செய்ததால் இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா 5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

Monday, 13 July 2020

O Manithane Nee Engae ஓ மனிதனே நீ எங்கே


O Manithane Nee Engae ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

Ennandai Vanthidayo என்னண்டை வந்திடாயோ



Ennandai Vanthidayo 1. என்னண்டை வந்திடாயோ பின்பற்றி வந்திடாயோ உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றி வந்திடாயோ (2) - என் 2. உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு (2) - என் 3. கல்வாரி காட்சி கண்டும் கல் மனம் உருகலையோ ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பாராயோ (2) - என்

Sunday, 12 July 2020

Balamum Alla Barakiramum Alla பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல



Balamum Alla Barakiramum Alla பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும் குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும் --- அல்லேலூயா 2. பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில் ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில் --- அல்லேலூயா 3. ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும் பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும் --- அல்லேலூயா 4. மாற்றிவிடும் மாற்றிவிடும் உம்மை போல மாற்றிவிடும் ஆற்றி விடும் ஆற்றி விடும் என் காயங்களை ஆற்றி விடும் --- அல்லேலூயா