Thursday, 28 May 2020

Immanuvele Vaarum Vaarume இம்மானுவேலே வாரும் வாருமே



Immanuvele Vaarum Vaarume 1. இம்மானுவேலே வாரும் வாருமே மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித்தவிக்கும் மகிழ் மகிழ் சீயோனின் சபையே இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த்துளிரே வாருமே பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ வாருமே வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே மந்தார ராவின் மேகம் நீக்கிடும் இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4. தாவீதின் திறவுகோலே, வாருமே விண் வாசலைத் திறந்து தாருமே ஒடுக்கமாம் நல் வழி காத்திடும் விசாலமாம் துர்ப்பாதை தூர்த்திடும். 5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும் முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

Wednesday, 27 May 2020

Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்



Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் 1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம் 3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா பூத கணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ கீதம் 4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகிறார் ஜெயவீரன் - நம் மேள வாத்தியம் கை மணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ கீதம்

Gnana Naatha vanam Boomi ஞான நாதா வானம் பூமி




Gnana Naatha vanam Boomi 1. ஞான நாதா வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர் 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும் 3. நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம் வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம் சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று, ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்

Monday, 25 May 2020

Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும் மா நேச கர்த்தரே



Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் சகாயம் அற்றபோதிலும் நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறி வாடிடும் மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் நீர் பாவி நேசரே என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும் பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன் நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும் நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும் சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

Maa Matchi Karthar மா மாட்சி கர்த்தர்



Maa Matchi Karthar 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின்மேகம் கோபரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே 4. ஆ, சர்வ சக்தி சொல்லொண்ணா அன்பே மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும் மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

Sunday, 24 May 2020

Munnorin Deivamam முன்னோரின் தெய்வமாம்



Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்

Saturday, 23 May 2020

Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா



Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே 1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்ல பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணமுன் கூர் எங்கே பாதாளமுன் ஜெயமெங்கே சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் 5. ஆவியால் இன்றும் என்றும் ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே