Sunday, 1 December 2019

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 4. இயேசுவே, வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லேகேமில் கூடுங்கள் ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே லோகம் ஆளும் நாதரே ஏற்ற காலம் தோன்றினீர் கன்னியிடம் பிறந்தீர் வாழ்க நர தெய்வமே அருள் அவதாரமே நீர் இம்மானுவேல் அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவே வாழ்க நீதி சூரியனே மீட்பராக வந்தவர் ஒளி ஜீவன் தந்தவர் மகிமையை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்து சாவை வெல்லப் பிறந்தீர் மறு ஜென்மம் அளித்தீர்

Saturday, 30 November 2019

Paathai Kaatum Maa Yegovaa பாதை காட்டும் மாயெகோவா

Paathai Kaatum Maa Yegovaa 1. பாதை காட்டும், மாயெகோவா பரதேசியான நான் பலவீனன், அறிவீனன், இவ்வுலகம் காடுதான்; வானாகாரம் வானாகாரம் தந்து என்னைப் போஷியும். 2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை, நீர் திறந்து தாருமேன்; தீப மேக ஸ்தம்பம் காட்டும், வழியில் நடத்துமேன்; வல்ல மீட்பர் வல்ல மீட்பர் என்னைத் தாங்கும், இயேசுவே. 3. சாவின் அந்தகாரம் வந்து, என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றி தந்து, என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில் கீத வாழ்த்தல் கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன்

Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetper Patcham Nillum 1. நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார் 2. நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால் போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன் பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன் 3. நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும் சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர் 4. நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார் விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Friday, 29 November 2019

Yesuvodu Sernthirupathenna Pakiam இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்

Yesuvodu Sernthirupathenna Pakiam 1.இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவிப்பதோர் என்ன ஆனந்தம் ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே 2. போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபமெல்லாம் தாம் சுமந்ததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகுதே மன்னவா உம் கூட வாழ என்று கூடுமோ --- இயேசு 3. மாட்சி மிகும் நாட்டிலே நான் வாசஞ் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாதோர் நித்திய ராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே --- இயேசு 4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே --- இயேசு 5. நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாரீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட --- இயேசு

Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே

Theivanbin Vellamae 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான் புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பாதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப் பாதை தவறிடினும், கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா 4. மூர்க்ககுணம் கோபம் மோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் லோக ஏக்கம் தாக்கி தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய். 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் பூசைப் பீடம் படைப்பேன் மோச வழிதனை முற்றுமகற்றியென் நேசனே நினைத் தொழுவேன். 6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ, மகிமையோ, வருங்காலமோ, பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, பிரித்திடுமோ தெய்வன்பை

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங்கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார் 1. மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஒப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் 2. துக்கத்தால் தம் சீஷர்களே தலை சாய்த்து தூங்கினாரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந்தனிமையிலே – கர்த்தர் 3. பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன் ஆகட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ இரத்த வேர்வையுடன் – கர்த்தர் 4. திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் 5. இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப் பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்