Friday, 29 November 2019
Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே
Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்
Wednesday, 27 November 2019
Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்
பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்
2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய் --- பயப்படாதே
3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் --- பயப்படாதே
4.குளிர்ந்த ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய் --- பயப்படாதே
5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய் --- பயப்படாதே
6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் --- பயப்படாதே
7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய் ---- பயப்படாதே
Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த
2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த
3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த
4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த
5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த
Yesu Palanai Piranthar இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்
1.உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட --- இயேசு
2.விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு
3.ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு
4.கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் --- இயேசு
5.அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் --- இயேசு
Tuesday, 26 November 2019
Yesuvin Pinnae Poga Thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
3. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
4. என் மீட்பர் பாதைஎன்றும் பின்செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
6. நேசரின் சித்தம் செய்வதென் பாக்கியம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்
1.தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மா நிலத்தில் அவதரித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அற்புத பாலகன் இயேசுவுக்கே
2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் ஆடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா
3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா
4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா
5. தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா
Subscribe to:
Posts (Atom)