Friday, 29 November 2019

Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே

Theivanbin Vellamae 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான் புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பாதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப் பாதை தவறிடினும், கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா 4. மூர்க்ககுணம் கோபம் மோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் லோக ஏக்கம் தாக்கி தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய். 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் பூசைப் பீடம் படைப்பேன் மோச வழிதனை முற்றுமகற்றியென் நேசனே நினைத் தொழுவேன். 6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ, மகிமையோ, வருங்காலமோ, பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, பிரித்திடுமோ தெய்வன்பை

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங்கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார் 1. மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஒப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் 2. துக்கத்தால் தம் சீஷர்களே தலை சாய்த்து தூங்கினாரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந்தனிமையிலே – கர்த்தர் 3. பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன் ஆகட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ இரத்த வேர்வையுடன் – கர்த்தர் 4. திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் 5. இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப் பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

Wednesday, 27 November 2019

Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்

Kanaga Pathai Kadum Malaiyum
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய்  --- பயப்படாதே

4.குளிர்ந்த  ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய்  --- பயப்படாதே

5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய்  ---- பயப்படாதே

Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

Aanantha Geethangal Ennalum Paadi
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த

Yesu Palanai Piranthar இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Palanai Piranthar
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்

1.உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட --- இயேசு

2.விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

3.ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

4.கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் --- இயேசு

5.அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் --- இயேசு

Tuesday, 26 November 2019

Yesuvin Pinnae Poga Thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

Yesuvin Pinnae Poga Thuninthen
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

3. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

4. என் மீட்பர் பாதைஎன்றும் பின்செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

6. நேசரின் சித்தம் செய்வதென் பாக்கியம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்

Deva Devan Balakanai
1.தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மா நிலத்தில் அவதரித்தார்
         
              அல்லேலூயா அல்லேலூயா
             அற்புத பாலகன் இயேசுவுக்கே

2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் ஆடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா

3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா

4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
தாகம் தீர்க்கும்  ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா

5. தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா