Sathya Vethamana vithai
1. சத்ய வேதமான காலை மாலை விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே, அறுப்பின் நற்காலம் எதிர் நோக்குவோமே, சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
அரிக்கட்டோடே அரிக்கட்டோடே சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே.
2.மழையடித்தாலும் வெயிலெரித்தாலும் குளிர்ச்சியானாலும் வேலை செய்வோமே; நல்ல பலன் காண்போம், துன்பம் மாறிப்போகும் சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே.
3.கவலை, விசாரம்; கஷ்ட நஷ்டத்தோடு விதைத்தாலும் வேலை விடமாட்டோமே இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார் சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே.
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்
3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ
Arasanai Kanamalirupomo
அரசனைக் காணாமலிருப்போமோ – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத – அரசனைக்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத – அரசனைக்
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே – யூத – அரசனைக்
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத – அரசனைக்
4. அரமனையில் அவரைக் காணோமே – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு, அதோ பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் – யூத – அரசனைக்
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமி்ட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத – அரசனைக்