Thursday, 19 September 2019

Urakkam Thelivom உறக்கம் தெளிவோம்

Urakkam Thelivom 
உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரித் தொனிதான்
மழை மாறி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

1. அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்

2. அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்

3. கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதிலை

4. உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்

Wednesday, 18 September 2019

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை



Vilaintha Palanai Arupparillai
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே

1.அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த

2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த

3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த

Yesu Kiristhuvin Nal Seedaraguvom இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

Yesu Kiristhuvin Nal Seedaraguvom 
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு

           நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
           அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு

Irul Soolum Kalam Ini Varuthe இருள் சூழும் காலம் இனி வருதே



Irul Soolum Kalam Ini Varuthe
1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 

           திறவுண்ட வாசல் அடைபடுமுன்
           நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
           நாட்கள் கொடியதாய் மாறிடுதே
           காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 

2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

3. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

4. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

5. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே

Tuesday, 17 September 2019

Vithaippum Aruppumae விதைப்பும் அறுப்புமே

Vithaippum Aruppumae
1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?

Kalmithikum Desamellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்



Kalmithikum Desamellam
கால் மிதிக்கும் தேசமெல்லாம்  – என்
காத்தருக்கு சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1.பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி
அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் 
 அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

2.எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் 
அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

3.செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை 
அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

4.திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள் 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

Manthayil Sera Aadugale மந்தையில் சேரா ஆடுகளே

Manthayil Sera Aadugale

எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்