En Devane En Anbane
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
ஆசீர்வாத நிறைவுடன்
அன்பே என்மேல் இறங்கிடும்
1. இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் - என்
2. கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட - என்
3. அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் - என்
4. ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா - என்
5. ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட - என்
6. ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட - என்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.