Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம் அவர் உயர்ந்த நாமமதை ஒருமித்து உயர்த்திடுவோம் 1. சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே சபையாய் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் நம் துதியினையே சர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து சேதமின்றி நம்மை காத்தாரே பூரிப்புடனே நாம் பாடிடுவோம் புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3. மரண இருளில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4. ஜெயத்தின் கீதங்கள் பாடிடுவோம் ஜெயமும் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம் 5. பொன்னிலும் விலையேறப் பெற்றதான நல் விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் மாற்றுவார் சாயலை அந்நாளிலே மாண்புடனே அவர் மகிமையிலே
Sunday, 29 November 2020
Friday, 27 November 2020
Idhuvarai Seidha Seyalgalukkaaga இதுவரை செய்த செயல்களுக்காக
Idhuvarai Seidha Seyalgalukkaagaஇதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2) 1. உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் (2) நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) 2. தனி மரமாக இருந்த என்னை கனி மரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் (2) இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் (2) தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)
Thursday, 26 November 2020
Aayiram Sthothiramae ஆயிரம் ஸ்தோத்திரமே
Aayiram Sthothiramaeஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத்தாக்கிலே அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா 1. வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே 2. உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே சாத்தானை முறியடிப்பேன் 3. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன் 4. பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன் எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன் 5. இயேசுவின் நாமத்திலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் என்றென்றும் உம்மில் வாழ
Wednesday, 25 November 2020
Sthotharipen Sthotharipen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
Sthotharipen Sthotharipenஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
Nandriyaal Nenjam Nirainthiduthe நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
Nandriyaal Nenjam Nirainthidutheநன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே 1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் நீர்நிலைகள் சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள் தூயநல் தேன் மலர் தீங்கனிகள். 2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள் எழிலுடன் குழந்தைச் செல்வங்கள் துன்புறும் வேளையில் துணைக்கரங்கள் துதித்திட சொல்லுடன் ராகங்கள் 3. உறவுகள் மகிழ்ந்திட நல் நண்பர் உதவிகள் செய்திட பல்பணியர் அறவழி காட்டிட அருள் பணியர் அன்புடன் ஏற்றிட ஆண்டவர் 4.உருவுடன் விளங்கிட ஓருடலம் உடலதில் இறைவனுக்கோர் இதயம் பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய திருமறை பேசிடும் வானுலகம்
Monday, 23 November 2020
Nandriyal Padiduvom நன்றியால் பாடிடுவோம்
Nandriyal Padiduvomநன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெருங் கிருபை மாநிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியாய் 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர் 6. உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 7. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே
Friday, 20 November 2020
Kartharai Naan Ekkalathilumey கர்த்தரை நான் எக்காலத்திலுமே
Kartharai Naan Ekkalathilumeyகர்த்தரை நான் எக்காலத்திலுமே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே கருத்துடனே துதிப்பேன் 1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும் ஆதலால் கலக்கமில்லை அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக் காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை 2.இவ்வேளை கூப்பிட்டான் கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்த்தார் அவர் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கினார் இரட்சிப்பை அருளிச் செய்தார் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை
Tuesday, 17 November 2020
Konja Kaalam Yesuvukkaaga கொஞ்ச காலம் இயேசுவிற்காக
Konja Kaalam Yesuvukkaagaகொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்தநாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் – கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
Udaintha Ullamathai உடைந்த உள்ளமதை
Udaintha Ullamathaiஉடைந்த உள்ளமதை தேற்றிடும் யேசுநாதா (2) காரிருள் சூழ்கையிலே காத்திடும் கரத்தினால் (2) ஆ ... ஆ ... ஆ ... 1. நேசித்தவர்கள் கைவிட்டபோது நெஞ்சம் உருகியே நின்றேன் (2) என் நேசர் எங்கே என் நேசர் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 2. கண்ணீரின் பாதையைக் கடக்கும்போது துணையாய் யாருமே இல்லை (2) யாரிடம் செல்வேன் யாரிடம் செல்வேன் என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 3. ஆறுதலற்ற வாழ்வினைக் கண்டு துக்கத்தால் வாடியே போனேன் (2) ஆறுதல் எங்கே ஆறுதல் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ...
Sunday, 15 November 2020
Thollai Kashtangal Soolnthidum தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
Thollai Kashtangal Soolnthidum1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் 3.என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின்செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிட மாட்டார்
Saturday, 14 November 2020
Lo He Comes With Clouds
1. Lo he comes with clouds descending once for favoured sinners slain thousand thousand saints attending swell the triumph of his train. Hallelujah God appears on earth to reign. 2. Every eye shall now behold him robed in dreadful majesty those who set at naught and sold him pierced and nailed him to the tree deeply wailing shall the true Messiah see. 3. Now Redemption long expected see in solemn pomp appear all his saints by man rejected now shall meet him in the air Hallelujah See the day of God appear 4. Yea amen let all adore thee high on Thine eternal throne Saviour take the power and glory claim the kingdom for thine own Hallelujah Everlasting God come down.
Paavikaai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு
Paavikaai Maritha Yesu1.பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே வந்திடும்.
Wednesday, 11 November 2020
Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா
Yaar Vendum Nathaயார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ ஏனையா கேட்டீர் இக்கேள்வியை 4. என்னைத் தள்ளினால் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் 5. உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான்
Ooivunaalathanai yaasarithiduveer ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர்
Ooivunaalathanai yaasarithiduveer1. ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே நீர் ஓது மெய்த்தேவன்றன் ஆதி விதியிதை உள்ளத்திற் கொள்வீரே 2. ஆறுதினங்களும் லௌகீகவேலையை ஆதரவாய்ப் புரிவீர் ஆன வேழாந்தினம் வைதீகலலுவலை அவசியம் பார்த்திடுவீர் 3. ஆசோதை யாவர்க்கும் அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார் அடுத்த வேழா நாளைப் பரிசுத்தமாக்கினார் அப்பரிசறியீரோ 4. அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர் அதைத் திருநாளாக்கி ஆரியர் போதகங் கேட்டிடவாலயம் அதற்கு நடந்திடுவீர் 5. மக்களுந் தாயரும் வீட்டுடைத் தலைவரும் மற்றுள மித்திரரும் வாருங்களாலாயம் சேருங்கள் தேவனை வாழ்த்தி வணங்குவீரே
Monday, 9 November 2020
En Yesuve Naan Entrum என் இயேசுவே நான் என்றும்
En Yesuve Naan Entrumஎன் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும் 1. உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என் 2. அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்யும் --- என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின் செல்லுவேன் --- என் 4. அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் --- என் 5. ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன் --- என்
Subscribe to:
Posts (Atom)